வழமை போன்று இன்றைய தினம் பாடசாலைகள் நடைபெறும்!

அரச மற்றும் அரச அனுசரணையுடன் இயங்கும் பாடசாலைகளுக்கு இன்றைய தினம் (16) திங்கட் கிழமை விடுமுறை வழங்கப்படமாட்டாதென கல்வி இராஜாங்க அமைச்சர் அ. அரவிந்த் குமார் தெரிவித்துள்ளார்.

நேற்றைய தினம் தைப்பொங்கல் என்பதால், இன்று திங்கட் கிழமை (16) தமிழ் பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்குவது குறித்து கல்வி அமைச்சு ஆராய்வதாக முன்னதாக தெரிவிக்கப்பட்டது.

பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்காதிருக்க தீர்மானம்

எனினும், மூன்றாம் தவணை விடுமுறை 3 கட்டங்களாக வழங்கப்பட்டு வருவதை கருத்திற்கொண்டு, இன்றைய தினம் பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்காதிருக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, இன்று வழமைபோல பாடசாலை கற்றல், கற்பித்தல் செயற்பாடுகள் இடம்பெறுமென இராஜாங்க அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

Recommended For You

About the Author: webeditor