இலங்கை கடற்பரப்பில் உள்ள எண்ணெய் மற்றும் எரிவாயு அகழ்விற்காக மேற்க்கொள்ளபப்ட்டுள்ள நடவடிக்கை!

இலங்கை கடற்பரப்பில் எண்ணெய் மற்றும் எரிவாயு அகழ்விற்காக முதலீட்டாளர்களை பெற்றுக்கொள்வதற்கு தேவையான சட்ட விதிமுறைகள் உருவாக்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.

அதற்கமைய, இலங்கை கடற்பரப்பில் உள்ள கனிம வளங்களை ஆராய்ந்து முதலீடு செய்வதற்கான நடவடிக்கைகளை பெற்றோலிய அபிவிருத்தி அதிகார சபை ஆரம்பிக்கவுள்ளது.

இதற்காக இலங்கை கடற்பரப்பில் 900 பிரிவுகள் நியமிக்கப்பட்டுள்ளதுடன், பெற்றோலிய அபிவிருத்தி அதிகார சபையினால் உரிய எல்லை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

கனிம வளங்களை ஆய்வு செய்தல் மற்றும் முதலீடு செய்வது தொடர்பான உத்தரவுகள் அடங்கிய சிறப்பு வர்த்தமானி அறிவிப்பும் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

இது தொடர்பான ஆய்வு மற்றும் முதலீட்டு நடவடிக்கைகளுக்கான ஆர்வத்தை வெளிப்படுத்துவதற்கான கோரிக்கை, முன்மொழியப்பட்ட திட்டம் மற்றும் அதை முடிப்பதற்கான எதிர்பார்க்கப்படும் காலக்கெடு ஆகியவை பெற்றோலிய மேம்பாட்டு ஆணையத்தின் பணிப்பாளர் நாயகத்திடம் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.

அவர்களின் தகுதி, அனுபவம், நற்பெயர் மற்றும் நிதித் திறன் அடங்கிய அறிக்கையும் பெற்றோலிய அபிவிருத்தி அதிகாரசபைக்கு சமர்ப்பிக்கப்பட வேண்டும். ஒரு தரப்பினர் தொடர்புடைய தகுதிகளைப் பூர்த்தி செய்த பின்னரே இந்த அகழ்விற்குள் இணைய வேண்டும்

Recommended For You

About the Author: webeditor