நாளைய தினம் இலங்கைக்கு விஜயம் செய்ய இருக்கும் சீன கம்யூனிஸ்ட் கட்சியின் உயர்மட்ட பிரதிநிதிகள் குழு

சீன கம்யூனிஸ்ட் கட்சியின் உயர்மட்ட பிரதிநிதிகள் குழுவொன்று நாளைய தினம் இலங்கைக்கு விஜயம் செய்ய உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

18 ஆம் திகதி வரை இலங்கையில் தங்கியிருக்கும் சீனப் பிரதிநிதிகள்

இவர்கள் எதிர்வரும் 18 ஆம் திகதி வரை இலங்கையில் தங்கியிருப்பார்கள். இலங்கை வரும் சீன கம்யூனிஸ்ட் கட்சியின் பிரதிநிதிகளுக்கு அந்த கட்சியின் சர்வதேச பிரிவின் பிரதியமைச்சர் சேங் ஷவ் தலைமை தாங்குகிறார்.

இவர்கள் இலங்கையில் தங்கியிருக்கும் காலப்பகுதியில் இலங்கை அரசாங்கத்தின் பிரதானிகள் மற்றும் உயர் மட்ட அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளனர்.

Recommended For You

About the Author: webeditor