இலங்கை போக்குவரத்துச் சபைக்கு சொந்தமான பேருந்து மட்டுநகரில் விபத்திற்குள்ளானது!

மட்டு நகரில் இ.போ.ச பேருந்து கோர விபத்து – தெய்வாதீனமாக உயிர்தப்பிய பயணிகள்!!

மட்டக்களப்பு – திருகோணமலை பிரதான வீதியின் ஊறணி பகுதியில் இன்று அதிகாலை 5.30 மணியளவில் இலங்கை போக்குவரத்துசபை பஸ் பாரிய விபத்திற்குள்ளாகிய நிலையில் அதில் பயணித்தவர்கள் தெய்வாதீனமாக உயிர்தப்பியுள்ளனர்.

இன்று அதிகாலை ஏறாவூரில் இருந்து அக்கரைப்பற்று நோக்கி சென்ற பஸ் ஊறணிச்சந்தியில் உள்ள பனை மரத்தில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

இந்த விபத்தில் இரண்டு பயணிகள் காயமடைந்த நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பஸ்சின் முன்னால் திடீரென குறுக்கறுத்த துவிச்சக்கர வண்டியில் பயணித்த நபரை காப்பாற்ற முயற்சித்த வேளையிலேயே பஸ் பணை மரத்துடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளாகியதாக குறித்த பஸ்சின் நடத்துனர் தெரிவித்தார்.

இந்த விபத்து காரணமாக பஸ்சின் முன்பக்க பகுதி கடுமையாக சேதமடைந்துள்ளதுடன் குறித்த விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை மட்டக்களப்பு தலைமையக போக்குவரத்து பொலிஸார் முன்னெடுத்துவருகின்றனர்.

Recommended For You

About the Author: webeditor