இலங்கைக்கு கடனை மீள செலுத்த அவகாசம் வழங்கிய நாடு

இலங்கை வாங்கிய கடனை மிள் செலுத்துவதற்கு பங்களாதேஷ் அரசாங்கம் 6 மாத கால அவகாசத்தை வழங்கியுள்ளது.

இலங்கையின் கோரிக்கைக்கு பதிலளித்த போதே பங்களாதேஷ் அரசாங்கம் இந்த கால அவகாசத்தை வழங்கியுள்ளது.

பங்களாதேஷ் மத்திய வங்கி வழங்கிய 200 மில்லியன் அமெரிக்க டொலர் கடனை செலுத்துவற்கே இவ்வாறு கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

இலங்கையில் நிலவும் கடுமையான பொருளாதார நெருக்கடி காரணமாக, இந்தக் கடனைத் திருப்பிச் செலுத்துவதற்கான கால அவகாசத்தை நீடிக்குமாறு பங்களாதேஷிடம் இலங்கை கோரிக்கை விடுத்திருந்தது.

இவ்வாறான நிலையிலேயே இந்த கால அவகாசம் இலங்கை அரசாங்கத்திற்கு வழங்கப்பட்டுள்ளது.

Recommended For You

About the Author: webeditor