பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறிய பின் ஜனனிக்கு கிடைத்த முதல் வாய்ப்பு!

தமிழகத்தில் பிரபலமான தொலைக்காட்சிகளில் ஒன்றான விஜய் டிவியில் 94 நாட்களை கடந்தும் சூப்பராக ஓடிக் கொண்டிருக்கும் நிகழ்ச்சிதான் பிக்பாஸ் சீசன் 6.

இந்த நிகழ்ச்சியில் முக்கிய போட்டியாளராக கலந்து கொண்டவர் தான் இலங்கைப் பெண்ணான ஜனனி. தற்போது இவர் இந்த நிகழ்ச்சியின் மூலம் மிகவும் பிரபல்யமாகியுள்ளார்.

அதேபோல் ஆரம்பத்தில் இவரது நடவடிக்கைகள் ரசிகர்களை மிகவும் கவரும் வகையில் இருந்ததால், ஏராளமானோர் ஜனனியை ஆதரிக்க தொடங்கினர்.

ஆனால் போகப்போக அமுதவாணனுடன் இவர் கூட்டு சேர்ந்து விளையாடுவது, எப்பொழுதுமே அவருடனே அமுது அமுது என சுற்றுக்கொண்டு இருந்தது சலிப்படைய செய்தது. இதனாலேயே பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறினார்.

பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேதைத் தொடர்ந்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆர்வமாக இருந்த இவர் தற்பொழுது பூர்விகா மொபைல் விளம்பரத்தில் நடித்துள்ளார்.

இதனால் ஜனனிக்கு ரசிகர்கள் பலரும் வாழ்த்துத் தெரிவித்துள்ளனர்.

 

View this post on Instagram

 

A post shared by janany (@janany_kj)

Recommended For You

About the Author: webeditor