மின்கட்டண அதிகரிப்புக்கு எதிராக மௌனப் போராட்டம்!

நாட்டின் மின் கட்டண உயர்வுக்கு எதிராக இன்றைய தினம் (08-01-2023) மாலை 6.30 மணி முதல் 7 மணி வரை நாடு முழுவதும் அனைத்து மின்விளக்குகளையும் அணைக்குமாறு ஓமல்பே சோபித தேரர் மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

அவர் மேலும் கூறியதாவது,

தயவுசெய்து இதற்கு எதிராக மௌனப் போராட்டம் நடத்துங்கள். அரை மணி நேரம் விளக்குகளை அணைத்துவிட்டு நாங்கள் போராட்டம் நடத்தலாம்.

இதேவேளை, பௌர்ணமி தினமான நேற்று (06-01-2023) மின்வெட்டுக்கு மகா சங்கரத்தினர் உள்ளிட்ட பல தரப்பினர் தமது எதிர்ப்பை வெளியிட்டிருந்தனர்.

Recommended For You

About the Author: webeditor