இந்தியாவில் இருந்து இலங்கைக்கு பொருட்கள் கொண்டு வருவது தொடர்பில் ஆலோசனை!

இந்தியாவிலிருந்து இலங்கைக்கு பொருட்கள் கொண்டு வருவது தொடர்பில் கப்பல் நிறுவனத்துக்கும், யாழ். மாவட்ட வணிகர் கழகத்திற்கு இடையிலான சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.

யாழ். மாவட்ட வணிகர் கழகத்தின் தலைவர் ஆர்.ஜெயசேகரன் தலைமையில் இந்த கலந்துரையாடல் நேற்று (07.01.2023) இடம்பெற்றுள்ளது.

ஏற்றுமதி, இறக்குமதி
காங்கேசன்துறையிலிருந்து காரைக்காலுக்கான இந்த கப்பல் சேவையில் பொருட்களை ஏற்றுமதி செய்தல் மற்றும் இறக்குமதி செய்தல் என்பன இடம்பெற்றவுள்ளன.

இதன்போது பல்வேறு பிரச்சினைகள் தொடர்பிலும் என்னென்ன பொருட்களை இறக்குமதி செய்தல் என்பது தொடர்பிலும் வர்த்தகர்களினால் கலந்த ஆலோசிக்கப்பட்டுள்ளது.

பேச்சு வார்த்தைகள்
கப்பல் கம்பெனியுடன் நடத்தப்பட்ட பேச்சு வார்த்தைக்கு அமைவாக காங்கேசன்துறை துறைமுகத்தில் ஒரு கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது.

இந்த கலந்துரையாடலில் அமைச்சின் செயலாளர் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் என பலர் கலந்து கொண்டிருந்தனர்.

காங்கேசன்துறை துறைமுகத்திற்கு அண்மையில் உள்ள காரைக்கால் துறைமுகத்தின் ஊடாக இந்த பொருட்களின் ஏற்றுமதி இறக்குமதி இடம்பெறஉள்ளது. நான்கு மணித்தியாலத்தில் இந்த பொருட்களி ஏற்றுமதி இறக்குமதி இடம்பெறும் என தெரிவித்துள்ளார்.

Recommended For You

About the Author: webeditor