யாழில் ஜெலி மீனின் தாக்குதலுக்கு இலக்கான கடற்றொழிலாளர் ஒருவர் உயிரிழப்பு!

ஜெலி மீனின் தாக்குதலுக்கு இலக்கான கடற்றொழிலாளர் ஒருவர் 4 மாதங்களுக்கு பின்னர் உயிரிழந்துள்ள சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது.

இச் சம்பவம் யாழ்ப்பாணத்தில் இடம் பெற்றுள்ளதாக தெரிய வந்துள்ளது.

யாழ்ப்பாணம் குருநகர் பகுதியை சேர்ந்த அல்ஜின் ஜெனி ராஜ் (வயது 52) என்ற மீனவரே உயிரிழந்துள்ளதாக தெரிய வந்துள்ளது.

சம்பவம்
2022 செப்டெம்பர் மாதம் 09ஆம் திகதி பண்ணை பகுதியில் இறால் பிடிப்பில் ஈடுபட்டு இருந்த வேளை ஜெலி மீனின் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளார்.

அதனை அடுத்து யாழ்.போதனா வைத்திய சாலையில் 20 நாட்கள் தொடர் சிகிச்சை பெற்ற பின்னர் வீடு செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளார். இருந்த போதிலும் அவரால் பூரணமாக குணமடையவில்லை.

வீட்டில் ஓய்வில் இருந்த போதிலும் திடீர் சுகவீனங்கள் ஏற்பட்டு வந்தன.

இந்நிலையில் நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை ஜெலி மீனின் தாக்குதலின் தாக்கத்தினால் ஏற்பட்ட சுகவீனம் காரணமாக உயிரிழந்துள்ளார்.

Recommended For You

About the Author: webeditor