சட்டவிரோதமாக ஐரோப்பாவிற்குள் நுழைய முயன்ற இளைஞன் ஒருவன் உயிரிழப்பு!

சட்டவிரோதமாக ஐரோப்பாவிற்குள் நுழைய முயன்ற முல்லைத்தீவு இளைஞன் ஒருவர், பெலாரஸ்- போலந்து எல்லையில் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன .

சட்டவிரோத பயண முகவர் இந்த தகவலை உயிரிழந்த இளைஞனின் குடும்பத்தினருக்கு அறிவித்ததாக தெரிவிக்கப்படுகிறது.

சம்பவத்தில் முல்லைத்தீவை சேர்ந்த இரத்னராசா சஜந்தன் (33) என்ற இளைஞனே உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

எனினும், இளைஞனின் தொடர்பில் தகவல் அறிய முடியாது குடும்பத்தினர் பெரும்சோகத்தில் உள்ளதாக கூறப்படுகின்றது .

Recommended For You

About the Author: webeditor