இந்தியாவில் இடம்பெற்ற விபத்தில் உயிரிழந்த இலங்கை பெண் தொடர்பில் வெளியாகியுள்ள செய்தி!

சென்னையில் சமீபத்தில் இடம்பெற்ற விபத்து ஒன்றில் இலங்கையை சேர்ந்த 22 வயதான இளம்பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இலங்கையைச் சேர்ந்த 22 வயதான ஷோபனா என்ற பெண்ணே இவ்வாறு விபத்தில் உயிரிழந்துள்ளார்.

இவர் கூடுவாஞ்சேரியில் உள்ள தனியார் மென்பொருள் நிறுவனத்தில் பணிப்புரிந்து வந்த நிலையில் தனது தம்பியை பாடசாலைக்கு இரு சக்கர வாகனத்தில் அழைத்து சென்றவேளை விபத்து ஏற்பட்டு உயிரிழந்துள்ளார்.

இவ்விபத்து குறித்து வெளியான காரணம்

குறித்த பெண் தனது தம்பியை இரு சக்கர வண்டியில் பாடசாலைக்கு அழைத்துச் செல்லும் போது தாம்பரம் – மதுரவாயல் பைபாஸ் சர்வீஸ் சாலை மதுரவாயில் அருகே எதிரே வந்த வேனுடன் இருசக்கர வாகன கைப்பிடி மீது மோதியதில் நிலை தடுமாறி இருவரும் கீழே விழுந்துள்ளனர்.

இதன்போது, பின்னால் மணல் ஏற்றி வந்த லொறி ஏறியதில் ஷோபனா சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் விபத்தினை ஏற்படுத்திய வேன் மற்றும் லொறி சாரதிகள் இருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் பிரேத பரிசோதனை முடிந்து ஷோபனாவின் உடல் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன், அவரது தந்தை வெளிநாட்டில் இருந்து வந்து கொண்டிருப்பதால் இறுதி சடங்குகள் இன்று நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Recommended For You

About the Author: webeditor