சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடு ஏற்ப்பட்டுள்ளமையால் பொலித்தீன் பைகளில் எரிவாயு நிரப்பும் மக்கள்!

பாகிஸ்தானில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு ஏற்பட்டுள்ள தட்டுப்பாடு காரணமாக அந்நாட்டு மக்கள் பொலித்தீன் பைகளில் எரிவாயு நிரப்பி செல்லும் அவலநிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

பாகிஸ்தானில் வீடுகளில் சமையலுக்கு பயன்படுத்தும் எரிவாயு சிலிண்டர் உற்பத்தி போதிய அளவு இல்லாததால் சிலிண்டருக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதுடன் எரிவாயு சிலிண்டரின் விலையும் அதிகரித்து வருகிறது.

இதனால் எரிவாயு சிலிண்டர் விற்பனையாளர்கள் விநியோகத்தை குறைத்துள்ளனர்.

பொலித்தீன் பைகளில் எரிவாயு
இதன் விளைவாக அந்த நாட்டு மக்கள் சிலிண்டர்களுக்கு பதிலாக பொலித்தீன் பைகளில் எரிவாயு நிரப்பி செல்லும் அவலநிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

அங்குள்ள கைபர் பக்துங்வா மாகாணத்தில் மக்கள் இவ்வாறு பொலித்தீன் பைகளில் எரிவாயு நிரப்பி செல்லும் வீடியோ மற்றும் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.

Recommended For You

About the Author: webeditor