காதலிப்பதாக கூறி பணம் பறித்த நபர் ஒருவர் கைது!

வவுனியாவில் யுவதி ஒருவரின் அந்தரங்க புகைப்படங்களை பகிர்ந்து பணம் பறித்ததாக இளைஞர் ஒருவருக்கு எதிராக வவுனியா பொலிசில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

வவுனியா நகரசபை உறுப்பினர் ஒருவரின் மகனுக்கு எதிராக வவுனியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. வவுனியா, உக்கிளாங்குளம் பகுதியை சேர்ந்த இளம் யுவதி ஒருவரை காதலிப்பதாக ஏமாற்றி அவரது அந்தரங்க படங்களை வைத்து குறித்த இளைஞர் பணம் பறித்ததாக கூறப்படுகின்றது.

பொலிஸில் முறைப்பாடு
வவுனியா நகரசபை உறுப்பினர் ஒருவரின் மகன் உக்கிளாங்குளம் பகுதியை சேர்ந்த இளம் யுவதியை மணம் முடிப்பதாக கூறி ஆசை வார்த்தைகளை கூறி ஏமாற்றியுள்ளார்.

அதன்போது, இருவரும் பகிர்ந்து கொண்ட படங்களை வைத்து யுவதியை அச்சுறுத்தி பணம் பெற்றதுடன் அக் காணொளிகளை தனது நண்பர்களுடனும் பகிர்ந்துள்ளதாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இது தொடர்பாக பாதிக்கப்பட்ட யுவதி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாட்டை பதிவு செய்துள்ளார். அதேவேளை முன்னாள் காதலனின் தரப்பில் பாதிக்கப்பட்ட யுவதியின் குடும்பத்தினருக்கு முறைப்பாட்டை மீள பெறுமாறு அச்சுறுத்தல் விடப்பட்டதாக கூறப்படுகின்றது.

இந்நிலையில் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வவுனியா பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

Recommended For You

About the Author: webeditor