யாழில் பொலிஸாரின் சமிக்ஞையை மீறி சென்ற இளைஞருக்கு ஒரு மாத சிறை தண்டனை!

யாழ். நெல்லியடியில் பொலிஸாரின் சமிக்ஞையை மீறி மோட்டார் சைக்கிள் செலுத்திய இளைஞருக்கு ஒரு மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

நீதிமன்ற உத்தரவு
குறித்த இளைஞர் பருத்தித்துறை நீதவான் நீதிமன்றத்தில் நேற்று (23.11.2022) முன்னிலைப்படுத்தப்பட்ட போது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதன்போது குறித்த இளைஞருக்கு ஒரு மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளதுடன் 45000 ரூபாய் தண்டப்பணமும் விதிக்கப்பட்டுள்ளது.

பொலிஸாரின் சமிக்ஞையை மீறிய இளைஞர்
நெல்லியடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் போக்குவரத்து பொலிஸார் கடமையில் இருந்த போது மோட்டார்சைக்கிளில் வீதியில் வந்த இளைஞரை மறித்தபோது, பொலிஸாரின் சமிக்ஞையை மீறி அந்த இளைஞரின் அவ்விடத்திலிருந்து தப்பியோடியுள்ளார்.

குறித்த இளைஞரின் மோட்டார்சைக்கிளின் இலக்கத்தின் அடிப்படையில் அவரை அடையாளம் கண்டு பொலிஸார் கைது செய்து பருத்தித்துறை நீதவான் நீதிமன்றில் முற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Recommended For You

About the Author: webeditor