2023 நடக்கபோகும் மற்றுமோர் நிகழ்வு குறித்து பாபா வங்கா வெளியிட்டுள்ள அதிர்ச்சி கணிப்பு!

2023ஆம் ஆண்டுக்கான பாபா வங்காவின் கணிப்புகள் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

பாபா வங்கா உயிரிழப்பதற்கு முன், இனிவரும் ஒவ்வொரு ஆண்டும் எப்படி இருக்கும் என பல்வேறு கணிப்புகளை சொல்லியுள்ளார். இவரது கணிப்புகளில் 85% அளவுக்கு நடந்தேறியுள்ளதாக கூறப்படுகின்றது.

பல்கேரியா நாட்டை சேர்ந்தவர் பாபா வங்கா 12 வயதில் சூறாவளியில் சிக்கி கண்பார்வையை இழந்தார். பார்வை பறிபோனாலும் கடவுள் தனக்கு எதிர்காலத்தை கணிக்கும் சக்தியை வழங்கியுள்ளதாக பல விடயங்களை கணித்துள்ளார்.

2023க்கான பாபா வங்காவின் கணிப்பு
அந்த வகையில், 2023க்கான பாபா வங்காவின் கணிப்புகளின் படி, ஒரு பெரிய நாடு உயிரியல் ஆயுதங்களால் மக்களை தாக்கும் என கூறப்பட்டுள்ளது.

தற்போதைய சூழ்நிலையைப் பார்த்தால், ரஷ்யா – உக்ரைன் போர் முழு உலகிற்கும் உண்மையான அச்சுறுத்தலாக மாறியுள்ளது மற்றும் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் அணு ஆயுதங்களைப் பயன்படுத்துவதாக பல முறை அச்சுறுத்தியுள்ளார் என்பது கவனிக்கத்தக்கது.

2023 ஆம் ஆண்டில் சூரிய புயல் அல்லது சூரிய சுனாமி ஏற்படும், இது கிரகத்தின் காந்த கவசத்தை கடுமையாக சேதப்படுத்தும். 2023 ஆம் ஆண்டில் உலகம் முழுவதும் இருளில் மூழ்கும்.

வேற்றுகிரகவாசிகள் (ஏலியன்ஸ்) பூமியைத் தாக்கலாம் மற்றும் மில்லியன் கணக்கான மக்கள் அதில் இறக்க நேரிடும். அணுமின் நிலையத்தில் ஒரு வெடிப்பு ஏற்படலாம், இதன் காரணமாக நச்சு மேகங்கள் ஆசியா கண்டத்தை மூடிவிடும்.

இதன் விளைவாக பல நாடுகள் கடுமையான நோய்களால் பாதிக்கப்படும். 2023-க்குள் மனிதர்கள் ஆய்வகங்களில் பிறப்பார்கள். இங்கிருந்து மக்களின் தன்மை மற்றும் தோலின் நிறம் தீர்மானிக்கப்படும். இதன் பொருள் என்னவெனில் பிறப்பு செயல்முறை முற்றிலும் கட்டுப்படுத்தப்படும் என கூறப்பட்டுள்ளது.

இந்த நிலையில், இன்னும் பல ஆண்டுகளுக்கு பின்னர் நடக்கவிருக்கும் சம்பவங்கள் தொடர்பிலும் அவரின் கணிப்புகள் வெளியாகியுள்ளது.

நூறு வயதைக் கடக்கும் மக்கள்
2046 காலகட்டத்திற்கு பின்னர் உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்டு மக்கள் நூறு ஆண்டுகளுக்கும் மேலாக உயிருடன் வாழ்வார்கள் எனவும் பாபா வங்கா கணித்துள்ளார்.

2100க்கு பின்னர் பூமியில் இரவு நேரம் என்பதே இருக்காது எனவும், இரவை பகலாக்கும் செயற்கை சூரியன் உருவாக்கப்படும் எனவும் அவர் கணித்துள்ளார்.

மேலும், பூமியின் சுற்றுப்பாதை 2023ல் மாறும் என்றும் விண்வெளி வீரர்கள் 2028ல் வீனஸுக்கு பயணம் மேற்கொள்வார்கள் எனவும் பாபா வங்கா கணித்துள்ளார்.

உலகம் 5079 காலகட்டத்தில் பேரழிவால் முடிவுக்கு வந்துவிடும் எனவும் கண்பார்வையற்ற பாபா வங்கா கணித்துள்ளார்.

பாபா வங்காவின் பிரபலமான கணிப்புகள்
பாபா வங்கா உலக அழிவைப் பற்றியும் கணித்துள்ளார். உலகம் 5079 ஆம் ஆண்டில் அழியும்.

வெட்டுக்கிளிகள் 2022 ஆம் ஆண்டில் இந்தியாவைத் தாக்கக்கூடும். இது தவிர, பஞ்சம் போன்ற பேரிடர் பிரச்சினையையும் நாடு சந்திக்க நேரிடலாம்.

பூமியின் சுற்றுப்பாதை 2023 ஆம் ஆண்டு மாறும். அதே நேரத்தில், விண்வெளி வீரர்கள் 2028 ஆம் ஆண்டில் சுக்ரன் கிரகத்தை அடைவார்கள்.

2046-ம் ஆண்டில், மனிதர்கள் 100 வயது வரை வாழத் தொடங்குவார்கள். உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையில் பெரும் முன்னேற்றம் ஏற்பட்டு, மனிதர்கள் நீண்ட காலம் வாழ்வார்கள்.

அமெரிக்காவில் உள்ள வர்த்தக கோபுரங்கள் மீதான் தாக்குதல். அமெரிக்காவின் 44வது ஜனாதிபதியாக ஒரு கருப்பினத்தவர் பதவி ஏற்பார்.

2016ம் ஆண்டு ISIS என்னும் இஸ்லாமிய தீவிரவாத இயக்கம் வலிமை பெறும். ஐரோப்பாவில் இருந்து இங்கிலாந்து விலகும்.

பாபா வங்கா 2022 ஆம் ஆண்டு குறித்த சில கணிப்புகளில், இதுவரை இரண்டு கணிப்புகள் உண்மையாகி உள்ளது.

இதில் முதலாவதாக அவுஸ்திரேலியாவின் சில பகுதிகளில் கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்படும் என்று கணிக்கப்பட்ட நிலையில் அவை உண்மையாகியுள்ளது.

Recommended For You

About the Author: webeditor