ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க குறித்து மைத்ரி வெளியிட்டுள்ள தகவல்!

இலங்கையில் எதிர்வரும் தேர்தலில் பரந்த கூட்டணியுடன் இணைந்து போட்டியிடவுள்ளதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான மைத்ரிபால சிறிசேன (Maithripala Sirisena) தெரிவித்துள்ளார்.

இலங்கை மகளிர் சங்கம் மற்றும் இலங்கை இளைஞர் சங்கம் ஆகியவற்றின் பொதுச் சபைக் கூட்டங்களின் கலந்து கொண்டு உரையாற்றும் போதே மைத்திரிபால சிறிசேன இதனை தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க (Ranil Wickremesinghe) பொதுஜன பெரமுன கட்சியின் அழுத்தங்களுக்கு உள்ளாகி சரியாகச் பயணிக்க முடியாத நிலையில் உள்ளதாகவும் மைத்திரிபால சிறிசேன மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Recommended For You

About the Author: webeditor