மின்வெட்டு தொடர்பான அறிவித்தல்!

எதிர்வரும் மூன்று நாட்களுக்கான மின்வெட்டு தொடர்பான அறிவிப்பை இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு வெளியிட்டுள்ளது.

இதற்கமைய, நாளை(29) மற்றும் நாளை மறுதினம்(30) 1 மணிநேரம் மின்வெட்டினை நடைமுறைப்படுத்த இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.

இதேவேளை எதிர்வரும் திங்கட்கிழமை(31) இரண்டு மணிநேரம் மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்படும் என இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

நேர அட்டவணை

இதற்கமைய, நாளை(29) மற்றும் நாளை மறுதினம்(30) A,B,C,D,E,F,G,H,I,J,K,L,P,Q,R,S,T,U,V,W ஆகிய வலயங்களுக்குட்பட்ட பகுதிகளில் 1 மணி நேரம் மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

மேலும் குறித்த பகுதிகளுக்கான மின்வெட்டு மாலை 5.30 மணி முதல் இரவு 8.30 மணிவரை நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

இதேவேளை எதிர்வரும் திங்கட்கிழமை(31) பகலில் 1 மணிநேரம் மற்றும் இரவில் 1 மணிநேரம் என மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

Recommended For You

About the Author: webeditor