யாழில் ஒன்பது மாதங்களுக்கு பின்னர் கைதான நபர்

யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் 09 மாதங்களுக்கு பின்னர் கைது செய்யப்பட்டுள்ளார். சுன்னாகம் – மயிலங்காடு பகுதியில், கடந்த ஜனவரி மாதம் கொடுக்கல் வாங்கல் பிரச்சனை காரணமாக இளைஞன் ஒருவர் மீது வாள் வெட்டு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது. சம்பவம் தொடர்பாக... Read more »

யாழில் கை துண்டிக்கப்பட்ட சிறுமி தொடர்பில் நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு!

தாதியின் கவனக்குறைவால் யாழ் போதனா வைத்திய சாலையில் துண்டிக்கப்பட்ட 08 வயது சிறுமியின் கையை கொழும்புக்கு அனுப்பி மேலதிக பரிசோதனைகளை மேற்கொள்ளுமாறு யாழ்.நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. குறித்த சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணை நேற்று புதன்கிழமை(13) யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. சிறுமியின்... Read more »
Ad Widget

ஜனாதிபதியிடம் தேர்தலை நடாத்த கோரும் பசில்

இதுவரை பிற்போடப்பட்டுள்ள உள்ளூராட்சி மன்ற தேர்தலை நடத்துமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகர் பசில் ராஜபக்ஷ கோரிக்கை விடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் பாரியளவிலான வேட்பாளர்கள் களமிறங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.... Read more »

உயர்தர பரீட்சைக்கான நேர அட்டவணை வெளியானது!

2023 ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தரப் பரீட்சைக்கான நேர அட்டவணை பரீட்சைகள் திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ளது. உயர்தரப் பரீட்சைகள் எதிர்வரும் நவம்பர் 27 ஆம் திகதி முதல் டிசெம்பர் 21 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது. Read more »

அமெரிக்க டொலரின் நிலவரம்

நேற்றுடன் ஒப்பிடுகையில் அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி இன்றையதினம்(14) மேலும் வீழ்ச்சியடைந்துள்ளது. இன்றைய நாணய மாற்று விகிதம் இந்தநிலையில், இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள இன்றைய (14.09.2023) நாணய மாற்று விகிதங்களின்படி, அமெரிக்க டொலரின் விற்பனை விலை 329.57 ரூபாவாகவும், கொள்வனவு... Read more »

வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியனின் தாயார் காலமானார்

வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியனின் தாயார் சிவபாக்கியம் மாணிக்கவாசகர் இன்று (வயது 86) உயிரிழந்துள்ளதாக கூறப்படுகின்றது. நீதிபதி இளஞ்செழியனின் கொழும்பு வீட்டில் வசித்து வந்த அவர், மாரடைப்பு காரணமாக உயிரிழந்துள்ளதாக கூறப்படுகின்றது. இவர் யாழ். வேலணை கிழக்கு மகா வித்தியாலயத்தின் ஓய்வு பெற்ற... Read more »

கனடாவில் வீட்டு வாடகைகள் தொடர்பில் வெளியாகிய அதிர்ச்சி தகவல்

கனடாவில் வீட்டு வாடகை தொகைகள் தொடர்ச்சியாக அதிகரித்து செல்வதாக தெரிவிக்கப்படுகிறது. சராசரியாக புது வாடகை குடியிருப்பாளர் ஒருவர் மாதம் ஒன்றுக்கு 2117 டாலர்களை வாடகையாக செலுத்த நேரிட்டுள்ளது. பிரபல இணையத்தளமான Rentals.ca வெளியிட்டுள்ள அண்மைய அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு ஆகஸ்ட்... Read more »

யாழில் பெருந்தொகையான தங்க நகைகள் மாயம்!

யாழ்ப்பாணம் – கோப்பாய் பகுதியில் தங்கநகைகள் மற்றும் அமெரிக்க டொலர்கள் என்பன கொள்ளையிடப்பட்டுள்ளன. யாழ்ப்பாணம் – கோப்பாய் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் உள்ள வீடொன்றில் நேற்றைய தினம் (12.09.2023) 53 பவுண் பெறுமதியான தங்க நகைகள் மற்றும் 100 அமெரிக்க டொலர்கள் கொள்ளையிடப்பட்டுள்ளன.... Read more »

இலங்கையில் அரச அதிகாரிகளுக்கு பிறப்பிக்கப்பட்டுள்ள உத்தரவு!

நாட்டின் அபிவிருத்தி செயற்பாடுகளை திட்டமிடும் போது அது தொடர்பில் மாவட்ட அபிவிருத்திக்குழு மற்றும் பிரதேச அபிவிருத்திக்குழு என்பவற்றுக்கு அறிவிக்க வேண்டும் என அரச அதிகாரிகளுக்கு ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க உத்தரவு விடுத்துள்ளார். அனைத்து அமைச்சுக்களின் செயலாளர்கள், மாகாண பிரதம செயலாளர்கள், மாவட்ட செயலாளர்கள்... Read more »

சமையல் எரிவாயு சிலிண்டருக்கு தட்டுப்பாடு!

கடந்த சில தினங்களாக கொழும்பு மற்றும் அதனை அண்மித்த பிரதான நகரங்களில் எரிவாயு சிலிண்டர்களுக்கு மீண்டும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக பாவனையாளர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர். இது தொடர்பில் எரிவாயு விற்பனையாளர்கள் தமக்கு நிறுவனத்திடமிருந்து எரிவாயு சிலிண்டர்கள் விநியோகம் சில தினங்களாக மேற்கொள்ளப்படவில்லை எனவும் இதனால் இந்த... Read more »