கொழும்பு தேசிய வைத்தியசாலையில் மோதல்!

கொழும்பு தேசிய வைத்தியசாலையின் சிறு ஊழியர்களுக்கிடையில் ஏற்பட்ட மோதலினால் ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அத்துடன், மற்றுமொரு வைத்தியசாலை சிற்றூழியர் கைது செய்யப்பட்டுள்ளார். நேற்று பிற்பகல் இலங்கை சுதந்திர பணியாளர்கள் சங்கம் மற்றும் தேசிய ஊழியர் சங்கத்தின் தொழிற்சங்க உறுப்பினர்கள் இருவரும் தேசிய வைத்தியசாலையில் சங்க... Read more »

மட்டக்களப்பு கல்லடிப் பாலத்தில் ஒன்றுகூடுமாறு அழைப்பு விடுக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்

எதிர்வரும் நான்காம் திகதி மட்டக்களப்பு கல்லடிப் பாலத்தில் ஒன்றுகூடுமாறு நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் அனைவருக்கும் அழைப்பு விடுத்துள்ளார். டுவிட்டர் பதிவொன்றில் அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். அந்த பதிவில் மேலும், எப்போதும் பெப்ரவரி 4ஆம் திகதி தமிழருக்கு இருள் தினமாகும். எமது உரிமைகளை நாம்... Read more »

அம்பாறை மாவட்டத்தில் அமைந்துள்ள காரைதீவு பிரதேச உள்ளூராட்சித் தேர்தலுக்கான கலந்துரையாடல்கள்

புனர்வாழ்வளிப்பட்ட தமிழ் விடுதலைப் புலிகள் கட்சியின் அம்பாறை மாவட்டத்தில் அமைந்துள்ள காரைதீவு பிரதேச உள்ளூராட்சித் தேர்தலுக்கான கலந்துரையாடல்கள், வாக்காளர் சந்திப்புக்கள் காரைதீவில் நடைபெற்றது. புனர்வாழ்வளிக்கப்பட்ட தமிழ் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவர் கந்தசாமி இன்பராசா தலைமையில் நடைபெற்ற கலந்துரையாடலில் வேட்பாளர்கள் மற்றும் மகளிர் அமைப்பினர்... Read more »

புதிய காதலனுடன் இணைந்து முன்னாள் காதலனை தாக்கிய யுவதி!

களுத்துறை, அகலவத்தை பிரதேசத்தில் தனது புதிய காதலன் மற்றும் உறவினருடன் இணைந்து தனது முன்னாள் காதலனை தாக்கி யுவதி கைது செய்யப்பட்டுள்ளார். இந்த குற்றச்சாட்டில் 17 வயது யுவதியே கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். கைது செய்யப்பட்ட யுவதி பாடசாலை மாணவி எனவும், பாடசாலை... Read more »

இலங்கையில் தேடப்படும் பிரித்தானிய பிரஜை குறித்து பொதுமக்களின் உதவியை நாடும் பொலிசார்

காலி முகத்திடல் போராட்டத்தின் போது சமூக ஊடகங்களில் செயற்பட்ட பிரித்தானிய பிரஜையான Kayleigh Fraser என்பவரை கண்டுபிடிப்பதற்கு குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் பொதுமக்களின் உதவியை கோரியுள்ளது. கடந்த ஒகஸ்ட் மாதம் குடிவரவு மற்றும் குடிவரவு அதிகாரிகள் அவரது வீட்டிற்கு சென்று விசா நிபந்தனைகளை... Read more »

கொழும்பின் முன்னாள் பேராயர் ஒஸ்வல்ட் கோமிஸ் ஆண்டகை காலமானார்.

கொழும்பின் முன்னாள் பேராயர் ஒஸ்வல்ட் கோமிஸ் ஆண்டகை காலமானார். கொழும்பு பேராயராகவும், கொழும்பு பல்கலைக்கழகத்தின் வேந்தராகவும் ஆண்டகை ஒஸ்வல்ட் கோமிஸ் நீண்ட காலம் கடமையாற்றியுள்ளார். சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழப்பு முன்னாள் பேராயர் ஒஸ்வல்ட் கோமிஸ் ஆண்டகை காலமாகும் போது அன்னாருக்கு 90... Read more »

உக்ரைன் மக்களிடம் மன்னிப்பு கோரிய ரஷ்யாவின் முன்னாள் கூலிப்படை தளபதி

உக்ரைன் மக்களிடம் ரஷ்யாவின் முன்னாள் கூலிப்படை தளபதி ஒருவர் பகிரங்கமாக மன்னிப்பு கோரியுள்ளார். உக்ரைன் மக்களுக்கு எதிராக போரிடும் சூழல் உருவானது தொடர்பில் தாம் வருந்துவதாகவும், போரில் அட்டூழியங்களில் ஈடுபட்டவர்களை நீதியின் முன் நிறுத்துங்கள் எனவும் அவர் கோரிக்கை வைத்துள்ளார். கடந்த மாதம் ஜனவரி... Read more »

இலங்கை மகளிர் கிரிக்கெட் அணியின் ஆலோசகராக சுசந்திகா ஜயசிங்க நியமனம்

ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கம் வென்ற திருமதி சுசந்திகா ஜயசிங்க (Susanthika Jayasinghe) இலங்கை மகளிர் கிரிக்கெட் அணியின் ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் நிறுவனம் தெரிவித்துள்ளது. இலங்கை மகளிர் கிரிக்கெட்டை மேம்படுத்தும் நோக்கில் அவர் அந்தப் பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ளார். அவர் நேற்றைய தினம் (01-02-2023)... Read more »

வீடொன்றினுள் மர்மமான முறையில் உயிரிழந்த இருவரின் சடலம் மீட்பு!

கேகாலை – தெரணியகல பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் மர்மமான முறையில் உயிரிழந்த இரண்டு பெண்களின் சடலங்களை பொலிஸார் மீட்டுள்ளனர். சடலமாக மீட்கப்பட்ட இரு பெண்களும் சகோதரிகள் என்பதுடன், வீட்டிலிருந்த 90 வயதான அவர்களது தாயார் தற்போது தெரணியகல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 51 மற்றும் 49... Read more »

சுவிசில் பலரது கண்ணீருக்கு மத்தியில் நிகழ்ந்த இறுதி நிகழ்வு!

சுவிட்சர்லாந்தின் ஆர்கெவ் கான்டனில் இடம்பெற்ற கார் விபத்துச் சம்பவத்தில், யாழ்ப்பாணம் சுழிபுரத்தை பூர்வீகமாக கொண்ட தந்தையும், மகனும் உயிரிழந்த சம்பவம் சுவிஸ் வாழ் புலம்பெயர் தமிழ் மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருந்தது. இந்நிலையில் தந்தையினது மகனதும் இறுதிக்கிரிகைகள் ஒன்றாக நடப்பெற்றமை பார்ப்பவர்கள் நெஞ்சங்களை கனக்கசெய்துள்ளது.... Read more »