மனைவியுடன் தகராறு கிணற்றுக்குள் குதித்த இளம் குடும்பஸ்தர் மரணம்!

வவுனியா, வீரபுரம் பகுதியில் உள்ள கிணறு ஒன்றில் இருந்து நேற்று (16) காலை இளம் குடும்பஸ்தரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக செட்டிகுளம் பொலிஸார் தெரிவித்துள்ளனர். மனைவியுடன் ஏற்பட்ட தகராறு காரணமாக இளம் குடும்பஸ்தர் வீட்டில் இருந்த கிணற்றுக்குள் குதித்துள்ளார். இதனையடுத்து, மனைவியும், பிள்ளைகளும் அயலில் உள்ளவர்களை... Read more »

தங்க ஆபரணங்களை திருடிய இளைஞர் கைது!

வவுனியா நகர சபை மைதானத்தில் நடைப் பயிற்சிக்கு வருகை தந்தவரின் நகைகளைத் திருடிய சம்பவம் தொடர்பில் 32 வயது இளைஞர் ஒருவர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார் என்று வவுனியா பொலிஸார் தெரிவித்தனர். வவுனியா, தோணிக்கல் பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர் நடைப் பயிற்சிக்காகக் கடந்த... Read more »
Ad Widget

தமிழரசுக் கட்சியின் தேசிய மாநாடு 19 ஆம் திகதி

தமிழரசுக் கட்சியின் தேசிய மாநாடு எதிர்வரும் 19 ஆம் திகதி நடைபெறவுள்ளதாக தெரியவந்துள்ளது. கட்சியின் புதிய தலைவராக நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தெரிவு செய்யப்பட்டுள்ள நிலையில் மாநாடு நடைபெறவுள்ளது. இதேவேளை தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் பதவியானது முதல் ஒரு வருடத்திற்கு குகதாசனுக்கு... Read more »

ஆதிலிங்கேஸ்வரர் முன் பாதணிகளுடன் பௌத்த தேரர்: வெடுக்குநாறிமலையில் மீண்டும் சர்ச்சை

வவுனியா – வெடுக்குநாறி ஆதி சிவன் ஆலயத்திற்கு பௌத்த பிக்குகள் இன்று சென்றிருந்த நிலையில், அங்குள்ள ஆதிலிங்கேஸ்வரர் முன் பாதணிகளுடன் பௌத்த தேரர் ஒருவர் இருக்கும் புகைப்படங்கள் தமிழ் மக்கள் மத்தியில் சலசலபபை ஏற்படுத்தியுள்ளது. இதன்போது ஆலயத்தின் நிர்வாகத்தினரும் அங்கு பிரசன்னமாகியிருந்தனர். ஆலயம் அமைந்துள்ள... Read more »

இராணுவத்திற்கு நீதிபதி மா. இளஞ்செழியன் உத்தரவு

பதினெட்டு (18) வருடங்களுக்கு முன்னர் தமிழ் இளைஞர் ஒருவர் காணாமல் போனமைக்கு இலங்கை இராணுவமே பொறுப்பு என நீதிமன்ற தீர்ப்பு ஒன்றின் ஊடாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஓமந்தை சோதனை சாவடியில் வைத்து காணாமல் போன தமிழ் இளைஞரான கந்தசாமி இளமாறன் தொடர்பில் தாக்கல் செய்யப்பட்ட ஆட்கொணர்வு... Read more »

புளியங்குளம் பகுதியில் யானையின் சடலம் மீட்பு

வவுனியா புளியங்குளம், பழையவாடியில் உள்ள தனியார் ஒருவருக்கு சொந்தமான பண்ணைகாணியில் இருந்து யானை ஒன்று சடலமாக மீட்கப்பட்டது. நேற்றையதினம் குறித்த காணியில் யானை ஒன்று இறந்து கிடப்பதை அவதானித்த காணியின் உரிமையாளர் புளியங்குளம் பொலிஸாருக்கு தகவல் வழங்கியிருந்தார். அதற்க்கமைய சம்பவ இடத்திற்கு சென்ற புளியங்குளம்... Read more »

பயன்பாட்டுக்கு உதவாத 7000 கிலோ உணவுப்பொருட்கள் அழிப்பு.!

சட்டவிரோதமான முறையில் நாட்டுக்குள் கொண்டுவரப்பட்ட 4 கோடி ரூபாய் பெறுமதியான பொருட்கள் வவுனியாவில் நீதிபதி முன்னிலையில் அழிக்கப்பட்டது. இந்தியாவில் இருந்து சட்டவிரோதமான முறையில் நாட்டுக்குள் கொண்டு வரப்பட்டு விற்பனை செய்யப்படவிருந்த அரிசி, மஞ்சள், கொத்தமல்லி, நிலக்கடலை உட்பட 7000 கிலோகிராம் உணவுப்பொருட்களும், சட்டவிரோத கிருமிநாசினிகளுமே... Read more »

வவுனியாவில் கடவுச்சீட்டுக்காக மரத்தில் ஏறிய நபரால் பரபரப்பு..!

கடவுச்சீட்டு பெற வந்த நபர் ஒருவர்கடவுச்சீட்டு காரியாலயத்தின் முன்பாக உள்ள மரமொன்றில் திடீரென ஏறி அபாய அறிவிப்பு விடுத்தமையால் வவுனியா பிராந்திய காரியாலய பகுதியில் பதற்றம் ஏற்பட்டது. திருகோணமலை மஹாயபுர பகுதியை சேர்ந்த 51 வயதுடைய அநுரகுமார என்பவர், வவுனியாவில் உள்ள கடவுச்சீட்டு காரியாலயத்திற்கு... Read more »

வவுனியா நடைபாதை வர்த்தக நிலையங்கள் நகரசபையால் அகற்றம்

வவுனியா பொது வைத்தியசாலை சந்தியில் இருந்து கொரவப்பொத்தான வீதி மற்றும் சந்தை உள்வட்ட வீதி ஆகியவை நடைபாதை வியாபாரிகளால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதால் பாதசாரிகள் பல்வேறு அசௌகரியங்களை எதிர்கொண்டுவருகின்றனர். இதனால் அடிக்கடி வாகன நெரிசல் ஏற்ப்பட்டுவருவதுடன், விபத்துக்களை சந்திக்கும் நிலைமையும் ஏற்பட்டுள்ளது. நடைபாதைகளை ஆக்கிரமித்து வியாபாரம் மேற்கொள்ளப்படுவதால்... Read more »

சிறைச்சாலை காவலில் இருந்த சந்தேகநபர் தப்பியோட்டம்

வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில், சிறைச்சாலை அதிகாரிகளின் காவலில் இருந்த சந்தேகநபர் ஒருவர் நேற்ற முன்தினம் காலை தப்பியோடியுள்ள நிலையில், அவரை தேடும் பணியில் பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த 26 ஆம் திகி கஞ்சா விற்பனை மற்றும் வைத்திருந்த குற்றச்சாட்டில் குறித்த சந்தேக... Read more »