புளியங்குளத்தில் ஒரு கிலோ கஞ்சாவுடன் ஒருவர் கைது

வவுனியா புளியங்குளத்தில் ஒரு கிலோ 350 கிராம் கஞ்சாவுடன் ஒருவரை கைது செய்துள்ளதாக புளியங்குளம் பொலிஸார் தெரிவித்தனர். புளியங்குளம் விசேட அதிரடிப் படையினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் நேற்றையதினம் புளியங்குளம் பகுதியில் விசேட சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டனர். இதன்போது புதுக்குடியிருப்பில் இருந்து பொல்காவலைக்கு செல்லும்... Read more »

ஜனாதிபதி தேர்தல்: தமிழ் கட்சிகளுக்கு அழைப்பு

ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் தமிழ்த் தேசிய கட்சிகள் ஒன்றிணைந்து உறுதியான தீர்மானத்தை மேற்கொள்ளவேண்டும் என வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் ரெலோவின் தலைவருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார். வவுனியாவில் ரெலோ அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில், கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை... Read more »
Ad Widget

அரசு சாதாரண மக்கள் மீது அடக்கு முறை பிரயோகிக்கிறது: துரைராசா ரவிகரன்

விடுதலைபுலிகளின் காலத்தில் அடக்குமுறைகள் இருக்கவில்லை. என முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவித்தார். வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் மீதான பொலிஸாரின் அடாவடித்தனத்தை கண்டித்தும், வவுனியா மாவட்ட தலைவி விடுதலை செய்யப்பட வேண்டும் என கோரி முல்லைத்தீவில் காணாமல் ஆக்கப்பட்டோர்களின் உறவுகளால்... Read more »

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் சங்க தலைவிக்கு தொடரும் விளக்கமறியல்

வவுனியா பொலிஸாரால் கைதுசெய்யப்பட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் சங்கத்தின் தலைவி சி.ஜெனிற்றாவின் விளக்கமறியல் வெள்ளிக்கிழமை வரை நீடிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கடந்த ஆண்டு இதே காலத்தில் 05ஆம் திகதி வவுனியாவிற்கு விஜயம் மேற்கொண்டு நகரசபை மண்டபத்தில் இடம்பெற்ற வன்னிமாவட்டங்களிற்கான ஒருங்கிணைப்பு குழுக்கூட்டத்தில் கலந்துகொண்டிருந்தார்.... Read more »

ரணில் வருகையால் பயன் இல்லை : செல்வம் எம்.பி விமர்சனம்!

ஜனாதிபதியின் வவுனியா வருகையானது சம்பிரதாய பூர்வமான ஒரு நிகழ்வே தவிர அதனால் பயன் ஏதும் இல்லை என்று பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார். வவுனியாவில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்து கருத்து... Read more »

வவுனியாவில் இரவோடு இரவாக நிரந்தரமாக அமைக்கப்பட இராணுவ முகம்

வவுனியா புதிய பேருந்து நிலையத்திற்கு முன்பாக நிரந்தர இராணுவ முகாம் ஒன்று இரவோடு இரவாக அமைக்கப்பட்டுள்ளது. ஈஸ்டர் குண்டுத்தாக்குதல் நடைபெற்றபோது வவுனியா புதிய பேருந்து நிலையத்திற்கு முன்பாக இராணுவ காவலரனொன்று அமைக்கப்பட்டு சோதனை நடவடிக்கைகள் இடம்பெற்றிருந்தது. அதன் பின்னரும் குறித்த காவலரண் அகற்றப்படாத நிலையில்... Read more »

விமானப்படை தளத்தை புகைப்படம் இளைஞன் கைது!

வவுனியா விமானப்படை தளத்தை புகைப்படம் எடுத்ததாக சந்தேகத்தின் பேரில் இளைஞரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். ஜனாதிபதி விசேட விமானத்தில் வவுனியா விமானப்படை தளத்திற்கு வருகை தந்து இன்று (05.01.2024) வன்னி அபிவிருத்தி குழு கூட்டத்தில் கலந்து கொள்ளவுள்ளார். புகைப்படம் எடுத்த இளைஞர் கைது இவ்வாறான சூழலில்... Read more »

வவுனியாவில் வேகமாக பரவும் எலிக்காய்ச்சல்

வவுனியா மாவட்டத்தில் எலிக்காய்ச்சல் பரவுவதால் பொது மக்களை அவதானமாக இருக்குமாறு சுகாதாரப் பிரிவினர் தெரிவித்துள்ளனர். வவுனியாவில் தற்பொழுது எலிக்காய்ச்சல் அதிகளவாக பரவுவதனால் பொது மக்கள் அவதானமாக இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள். இக் காய்ச்சலானது எலிகளில் இருந்து மனிதனுக்குப்ப பரவும் ஒருவகை பக்ரீறியா நோய் ஆகும். ஈரமான,... Read more »

ஜனாதிபதியின் வருகையை அடுத்து வவுனியாவில் சிலருக்கு நீதிமன்ற தடை உத்தரவு

வவுனியாவிற்கான அபிவிருத்தி குழு கூட்டத்தினை நடத்துவதற்கு நாளைய தினம் வவுனியா மாவட்ட செயலாளருக்கு வருகைதரும் இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிர்ப்பு தெரிவிக்ககூடும் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் பொலிஸாரினால் வவுனியாவை சேர்ந்த சிலருக்கு நீதிமன்றத்தினூடாக தடை உத்தரவு பெறப்பட்டுள்ளது. காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களின் சங்கங்களின்... Read more »

போதைப் பொருளுடன் சிக்கிய காதலர்கள்

வவுனியா, சிதம்பரபுரம் பகுதியில் போதைப்பொருள் வைத்திருந்த சந்தேகத்தின் அடிப்படையில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக சிதம்பரபுரம் பொலிஸார் தெரிவித்துள்ளனர். பொலிஸாருக்குக் கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில் சிதம்பரபுரம் பகுதியில் உள்ள வீடு ஒன்றில் சோதனை செய்த போதே குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. அவர்கள் இருவரும் காதலர்கள்... Read more »