சமுர்த்தி பயனாளிகள் தெரிவு சர்ச்சை குறித்து யாழ். அரச அதிபர் விடுத்துள்ள அறிவிப்பு

யாழ். மாவட்டத்தில் சமுர்த்திப் பயனாளிகள் தெரிவில் ஏதாவது முறைகேடு இடம்பெற்றிருந்தால் பாதிக்கப்பட்டோர் தங்களுடைய  மேன்முறையீடுகளை ஜூன் மாதம் 10 ஆம்  திகதி வரை அனுப்பி வைக்க முடியும். எனவே, இந்த விடயம்  தொடர்பில் பொதுமக்கள் குழப்பமடையத் தேவையில்லை என யாழ். மாவட்ட அரசாங்க அதிபர்... Read more »

உயிர் காக்கும் உத்தம கொடையாளர்கள் யாழில் கௌரவிப்பு

குருதிக் கொடையாளிகளையும் குருதிக் கொடை முகாமை ஒழுங்குபடுத்துபவர்களையும் கௌரவிக்கும் விசேட நிகழ்வு யாழ்ப்பாணத்தில் இன்றைய தினம் நடைபெற்றது. 100 குருதிக் கொடையாளர்களுக்கும் 50 குருதிக் கொடை முகாமை ஒழுங்குபடுத்துபவர்களுக்கும் கௌரவமளிக்கப்பட்டது. யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் பிராந்திய இரத்த வங்கி ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த நிகழ்வு... Read more »
Ad Widget

ஊடகவியலாளர் ஜோசப் ஐயாவின் 2-ம் ஆண்டு நினைவேந்தல்

சிரேஷ்ட ஊடகவியலாளர் , மொழிபெயர்ப்பாளர், இலக்கியவாதி அமரர் வின்சன் புளோறன்ஸ் ஜோசப் அவர்களின் 2 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு யாழ்.ஊடக அமையத்தில் இன்று திங்கட்கிழமை நடைபெற்றது. இலக்கியவாதி, மொழி பெயர்ப்பாளர், ஊடகவியலாளர் என பன்முக தளத்தில் இயங்கியவர் ஜோசப் ஐயா என அழைக்கப்படும்... Read more »

தமிழ் அரசியல் கைதி தேவதாசன் வீட்டிற்கு ‘குரலற்றவர்களின் குரல்’ அமைப்பு விஜயம்

பொது மன்னிப்பில் விடுதலையான தமிழ் அரசியல் கைதி தேவதாசன் வீட்டிற்கு ‘குரலற்றவர்களின் குரல்’ அமைப்பு விஜயம்! கடந்த 15 ஆண்டுகள் தமிழ் அரசியல் கைதியாக சிறைப்படுத்தப்பட்டிருந்த கனகசபை தேவதாசன் அவர்கள், ஜனாதிபதியின் பொதுமன்னிப்பில் விடுதலை செய்யப்பட்டுள்ளார். நெல்லியடி, கரவெட்டியை சேர்ந்த 65 வயதுடைய க.தேவதாசன்,... Read more »

யாழ் பல்கலையில் மூவருக்கு உயர் பதவி

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் சிரேஷ்ட விரிவுரையாளர்கள் மூவர் பேராசிரியர்களாகப் பதவி உயர்த்தப்பட்டுள்ளனர். பொறியியல், விவசாயம் மற்றும் இந்து கற்கைகள் ஆகிய பீடங்களைச் சேர்ந்த மூன்று சிரேஷ்ட விரிவுரையாளர்களைப் பேராசிரியர்களாகப் பதவி உயர்த்துவதற்குப் பல்கலைக்கழகப் பேரவை இன்று ஒப்புதல் வழங்கியுள்ளது. இந்நிலையில் பல்கலைக்கழகப் பேரவையின் மாதாந்தக் கூட்டம்... Read more »

யாழில் குடும்ப பெண்ணின் மரணத்துடன் தொடர்புடைய இளைஞர் ஒருவர் கைது!

யாழ்ப்பாணம் அளவெட்டியில் தீக் காயங்களினால் குடும்பப் பெண் உயிரிழந்த சம்பவத்துடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில் அளவெட்டியைச் சேர்ந்த ரெஜி நிசாந்தன் நிசாநந்தினி (வயது 43) என்ற 2 பிள்ளைகளின் தாயாரே உயிரிழந்தார். குறித்த சம்பவம் கடந்த 13ஆம் திகதி... Read more »

கட்டம் கட்டமாக அரசியல் கைதிகள் விடுதலை! ரோய் சமாதானம் உறுதி 

2008 ஆம் ஆண்டிலிருந்து அரசியல் கைதியாக மகசின் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தேவதாஸ் கனகசபை கொரோனா காலப்பகுதியில் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு மருத்துவ சிகிச்சை மேற்கொண்டிருந்தார். இதனடிப்படையில் ஜனாதிபதியின் பொதுமன்னிப்பில் நீதி அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷவின் உத்தரவின் பேரில் விடுதலையாகியுள்ளார். விடுதலையின் நிமிர்த்தம் நன்றி கூறும்... Read more »

மருதடியான் நிர்வாக சபை தேர்தல் இன்று

இலங்கையில் மிகவும் பிரசித்தி பெற்ற வரலாற்று சிறப்பு மிக்க விநாயகர் ஆலயங்களில் ஒன்றான யாழ்ப்பாணம் மானிப்பாய் மருதடி விநாயகர் கோவில் புதிய நிர்வாக சபைக்கான தேர்தல்  இன்று மெமோறியல் ஆங்கில பாடசாலையில் நடைபெற்று வருகிறது. சண்டிலிப்பாய் பிரதேச செயலாளர் திருமதி யசோதா முன்னிலையில் குறித்த... Read more »

யாழில் மின்சாரம் தாக்கியதில் பெண் ஒருவர் பரிதப மரணம்

யாழ் இளவாலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பெரியவிளான் பகுதியில் மின்சாரம் தாக்கி 60 வயதுடைய பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். வீட்டில் உள்ளவர்கள் வெளியே சென்றிருந்ந நிலையில், குறித்த பெண் தண்ணீர் இறைப்பதற்கு மோட்டாரை இயக்க முற்பட்டபோதே இந்த அனர்த்தம் நிகழ்ந்துள்ளதாக தெரியவந்துள்ளது. இந்நிலையில் அவரது சடலம்... Read more »

யாழ் மாவட்ட செயலாளரின் பசு மாடு திருட்டு!

யாழ்.மாவட்டத்தில் சட்ட விரோதமான முறையில் கால்நடைகளை வெட்டுபவர்கள் 10 லிட்டர் பால் கறக்கும் தன்னுடைய பசு மாட்டிணையும் வெட்டிவிட்டதாக யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் அம்பலவாணர் சிவபாலசுந்தரன் கவலை வெளியிட்டார். யாழ்.மாவட்ட செயலகத்தில் நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற கிராம உத்தியோகத்தர்களுடனான கலந்துரையாடலின்போதே அவர் இதனை தெரிவித்தார்.... Read more »