கல்விப் பொதுத் தராதர சாதாரண தர பரீட்சையில் யாழ் மாணவி சாதனை

கல்விப் பொதுத் தராதர சாதாரண தர பரீட்சை 2022(2023) ஆம் ஆண்டிற்கான பெறுபேறுகள் இன்றைய தினம் வெளியாகியுள்ளது. இந் நிலையில் யாழ் மாவட்ட மாணவி அனைத்துப் பாடங்களிலும் அதிவிஷேட சித்திகளைப் பெற்றுள்ளார். அதிவிஷேட சித்திகளைப் (9A) பெற்ற மாணவியான அபிவர்ஷினி ஆங்கில மொழி மூலம்... Read more »

முதலாவது MICE Expo யாழ்ப்பாணத்தில்! நாளை ஆரம்பம்!! அமைச்சர் ஹரின் பங்கேற்பு!!!

முதலாவது MICE Expo யாழ்ப்பாணத்தில்! நாளை ஆரம்பம்!! அமைச்சர் ஹரின் பங்கேற்பு!!! சுற்றுலாத்துறை மற்றும் காணி அமைச்சின் அனுசரணையின் கீழ் இலங்கை சமவாயப் பணியகத்தினால் (Sri Lankan Convention Bureau) யாழ்ப்பாணத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள முதலாவது MICE Expo ஆனது 2023 நவம்பர் 30... Read more »
Ad Widget

யாழ் போதனா வைத்தியசாலைக்கு செல்பவர்களே மிக அவதானம்!

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் கடந்த சில நாட்களாகதொலைபேசிகளை திருடிய குற்றச்சாட்டில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். வைத்தியசாலைக்கு வரும் நோயாளர்கள் மற்றும் நோயாளர்களை பார்வையிட வருபவர்களின் தொலைபேசிகளை திருடியவர்கள் யாழ்ப்பாண பொலிஸ் நிலைய குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். திருடப்பட்ட பெறுமதியான தொலைபேசிகள் குறித்த தொலைபேசி... Read more »

யாழில் அதிகரிக்கும் மாபியாக்கள் தொடர்பில் எச்சரிக்கை விடுக்கும் பொலிசார்!

யாழ்ப்பாணத்தில் வட்டிக்கு பணம் வழங்கி , சொத்துக்களை பறிமுதல் செய்யும் மாபியாக்கள் அதிகரித்து உள்ளதாகவும் , அவர்கள் தொடர்பில் நேரடியாக முறைப்பாடு செய்ய முடியும் எனவும் யாழ்.மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஜெகத் நிஷாந்த தெரிவித்துள்ளார். இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில், பாதிக்கப்பட்டவர்கள் முறைப்பாடுகள்... Read more »

யாழில் பாடசாலை மீது முறிந்து விழுந்த மரம்

யாழ்ப்பாணத்தில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக, பாடசாலை ஒன்றின் வகுப்பறைமீது மரம் ஒன்று சாய்ந்துள்ளது. பருத்தித்துறை பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட, J/401 கிராம சேவகர் பிரிவில் அமைந்துள்ள யா/ சித்தி விநாயகர் வித்தியாலயத்தின் வகுப்பறை மீது பாடசாலையில் இருந்த அத்தி மரம் சார்ந்துள்ளது. எனினும்... Read more »

யாழில் இருந்து கொழும்பு நோக்கி சென்ற ரயில் மீது மர்ம நபர்கள் தாக்குதல்!

யாழில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த ரயில் மீது இனந்தெரியாத நபர்களால் கல்வீச்சு தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது. இச்சம்பவம் நேற்றிரவு (29-11-2023) கோண்டாவில் பகுதியில் இடம்பெற்றுள்ளது. இச்சமபவத்தின் போது, ரயிலின் கண்ணாடி உடைந்ததுடன் எவருக்கும் காயங்கள் எவையும் ஏற்படவில்லை என தகவல் வெளியாகியுள்ளது. குறித்த சம்பவம்... Read more »

யாழிற்கு பெருமை தேடிக் கொடுத்த மாணவர்கள்

மலேசியாவில் நடைபெறவுள்ள இவ்வாண்டுக்கான சர்வதேச மனக்கணித போட்டியில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த 19 மாணவர்கள் பங்கேற்கவுள்ளனர். சர்வதேச மனக்கணித போட்டியில் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தி 59 மாணவர்கள் பங்கேற்கவுள்ளனர். இந்த போட்டியில் யாழிலிருந்து மாத்திரம் 19 மாணவர்கள் கலந்துகொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சர்வதேச மனக்கணித போட்டி எதிர்வரும் 03ஆம்... Read more »

யாழில் விபரீத முடிவால் உயிரிழந்த இளைஞர்!

யாழ்ப்பாணம் பருத்தித்துறையில் இளைஞர் ஒருவர் விபரீத முடிவால் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றமை சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. வீட்டில் தனிமையில் இருந்த இளைஞர் விபரீத முடிவால் உயிரிழந்த சம்பவம் நேற்று செவ்வாய்க்கிழமை மாலை இடம் பெற்றுள்ளது. உடல் கூற்று சோதனை சம்பவத்தில் பருத்தித்துறை 4 ஆம் குறுக்குத்தெரு வீதியைச்... Read more »

யாழில் துஷ்பிரயோகம் செய்து யுவதி கொலை! நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு!

யாழில் யுவதி ஒருவரை கடத்திச் சென்று கூட்டு பாலியல் துஷ்பிரயோகம் செய்து கொலை செய்த சம்பவத்தில் குற்றவாளிகளாக மூன்று இராணுவ சிப்பாய்கள் கைது செய்யப்பட்டிருந்தனர். அவர்களுக்கு மேல் நீதிமன்றினால் மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்த நிலையில், மூன்று இராணுவ சிப்பாய்களில் இருவர் மேன்முறையீட்டு நீதிமன்றினால் குற்றமற்றவர்கள்... Read more »

யாழில் இளம் தாய்க்கு நிகழ்ந்த சோகம்!

யாழ்ப்பாணத்தில் இரட்டை குழந்தைகளை பிரசவித்த தாய் குழந்தைகளை பிரசவித்த சில நாட்களில் உயிரிழந்த சம்பவம் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் நேற்று திங்கட்கிழமை யாழ் போதனா வைத்திய சாலையில் இடம் பெற்றுள்ளது. சம்பவத்தில் தொண்டைமானாறு வல்வை வீதியைச் சேர்ந்த 25 வயதுடைய நி.விதுஷா என்ற... Read more »