தலைமுடியை தயார் செய்து கொண்டிருந்த இளம் பெண் உயிரிழப்பு!

கொழும்பு, கஹதுடுவ பிரதேசத்தில் மின் சாதனம் மூலம் தலைமுடியை தயார் செய்து கொண்டிருந்த தாய் ஒருவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார். வீட்டின் மேல் மாடியில் உள்ள குளியலறையில் விழுந்து உயிரிழந்துள்ளதாக கஹதுடுவ பொலிஸார் தெரிவித்தனர். பொல்கசோவிட்ட பிரதேசத்தை சேர்ந்த காஞ்சனா சுபாசினி லொகுஹேவகே என்ற... Read more »

பணத்திற்காக தந்தையை கொன்ற மகன்

ஓபநாயக்க பிரதேசத்தில் தந்தை ஒருவரை அவரது மகன் அடித்துக் கொலை செய்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. குடும்பத்தில் பணம் தொடர்பான வாக்குவாதத்தில் தாக்கப்பட்ட 72 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தந்தையொருவர், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் இரத்தினபுரி அடிப்படை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில்... Read more »
Ad Widget

சட்டவிரோதமாக மறைத்து வைக்கப்பட்ட சீனியை கண்டறிய விசேட நடவடிக்கை!

இலங்கையில் சட்டவிரோதமான முறையில் மறைத்து வைக்கப்பட்டுள்ள சீனியை மீட்டு கட்டுப்பாட்டு விலையில் மக்களுக்கு விநியோகிக்கவுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளது. இதற்கான ஏற்பாடுகள் நுகர்வோர் சட்டத்தின் கீழ் உள்ளதாக நுகர்வோர் விவகார அதிகார சபை குறிப்பிட்டுள்ளது. இதன்படி, சீனி இருப்புக்கள் மறைத்து வைக்கப்பட்டுள்ள... Read more »

மதுபானங்களின் விலை அதிகரிப்பு தொடர்பில் வெளியாகியுள்ள செய்தி!

நாட்டில் இந்த ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டத்தில் மதுபான உரிமக் கட்டணத்தை அதிகரிப்பதற்கு முன்மொழியப்பட்டாலும், அதன் மூலம் மதுபானங்களின் விலையை அதிகரிப்பதற்கான சாத்தியக்கூறுகள் இல்லை என கலால் திணைக்களம் தெரிவித்துள்ளது. மேலும், மதுபானசாலைகள் திறக்கப்படும் காலத்தை அவ்வப்போது திருத்த நடவடிக்கை எடுக்கப்படும் என கலால்... Read more »

இலங்கையில் அமுலாகும் புதிய வரி

இலங்கையில் 100 பொருட்களுக்கு வெட் வரி அறவிடப்படப் போவதாக நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார். இன்றைய தினம் (15-11-2023) வரவு செலவு திட்டம் தொடர்பான நாடாளுமன்ற விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். குறித்த வரவு செலவு... Read more »

எங்களையும் உயிருடன் விடுவிக்க வழிவகுங்கள்! தமிழ் அரசியல் கைதிகள் கோரிக்கை!!

எங்களையும் உயிருடன் விடுவிக்க வழிவகுங்கள்! 28 ஆண்டுகளாக சிறையில் வாடும் தமிழ் அரசியல் கைதிகள் கோரிக்கை! கடந்த 2006 ஆகஸ்ட் 14ஆம் திகதி, இலங்கைக்கான பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர் மீது நடாத்தப்பட்ட குண்டுத்தாக்குதல் சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பெயரில் கைதுசெய்யப்பட்டு, 16ஆண்டுகளாக விளக்கமறியலில் தடுத்துவைக்கப்பட்டிருந்த மூன்று... Read more »

” தலைமுடியை அறுத்து திருப்புலிச்சரப் பெருமானுக்கு விளக்கெரித்த நாயனார் ” சொற்பொழிவு

சிறுப்பிட்டியில் குருபூசையும் சொற்பொழிவும் இடம்பெறவுள்ளது. சைவ வாழ்வியலில் பெரிய புராணம் பெறும் முக்கியத்துவம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் முகமாக சிவநெறிப் பிரகாசர் சமயஜோதி கதிர்காமன் நிஜலிங்கம் அவர்களின் ஒழுங்கமைப்பில் நடத்தும் வாராந்த பெரிய புராணச் சிறப்புச் சொற்பொழிவுத் தொடர் 32 ( கணம்புல்ல நாயனார்... Read more »

சிறுப்பிட்டியில் மெய்ப்பொருள் நாயனார் குருபூஜை விழா

சிறுப்பிட்டியில் மெய்ப்பொருள் நாயனார் குருபூஜை விழா இடம்பெறவுள்ளது. சைவ வாழ்வியலில் பெரிய புராணம் பெறும் முக்கியத்துவம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் முகமகாச் சிவஸ்ரீ. பால.திருகுணானந்தக்குருக்கள் அவர்கள் நடாத்தும் வாராந்தப் பெரியபுராணச் சிறப்புச் சொற்பொழிவும், மாதத்தோறும் நாயன்மார் குருபூஜை விழா தொடர் 08 மெய்ப்பொருள் நாயனார்... Read more »

கந்தசஷ்டி விரத காலத்தில் முருக நாம பஜனையும் புராண படன நிகழ்வும்

இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் ஏற்பாட்டில் நல்லூர் ஸ்ரீலஸ்ரீ ஆறுமுக நாவலர் மணி மண்டபத்தில் முருக நாம பஜனையும் புராண படன நிகழ்வும் கந்தசஷ்டி விரத காலத்தில் 14.11.2023 செவ்வாய்க்கிழமை தொடக்கம் 18.11.2023 சனிக்கிழமை வரை மாலை 3.00 மணிக்கு முன்னெடுக்கப்படவுள்ளது. அந்தவகையில்... Read more »

நல்லூரில் முருக நாம பஜனையும் புராண படன நிகழ்வும்

இந்து சமய, கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் ஏற்பாட்டில், நல்லூர் ஸ்ரீலஸ்ரீ ஆறுமுக நாவலர் மணி மண்டபத்தில் முருக நாம பஜனையும் புராண படன நிகழ்வும் கந்தசஷ்டி விரத காலத்தில் 14.11.2023 செவ்வாய்க்கிழமை தொடக்கம் 18.11.2023 சனிக்கிழமை வரை மாலை 3.00 மணிக்கு முன்னெடுக்கப்படவுள்ளது. அந்தவகையில்... Read more »