கொழும்பில் மக்களை மிரட்டி பணம் திருடிய நபர் கைது!

கொழும்பில் அதிநவீன கருவியை பயன்படுத்தி பணப்பை திருடும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பாணந்துறை தெற்கு பொலிஸார் தெரிவித்துள்ளனர். தொடருந்தில் பயணித்த சந்தேகத்திற்கிடமான நபர்களை சோதனையிட்ட போதே சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார். அதிநவீன சாதனம் வலது கையில் அவரது விரலில் ஒட்டப்பட்ட நிலையில் காணப்பட்டது.... Read more »

குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களுக்கு மகிழ்ச்சியான செய்தி!

இதுவரை அஸ்வெசும நிவாரணத் திட்டத்திற்காக 60 பில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளது. இவ்வருடம் முன்வைக்கப்பட்டுள்ள வரவு செலவுத் திட்டத்தில் இது 183 பில்லியனாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இதில் பல சாதகமான விடயங்கள் உள்ளன என அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில், 2023ஆம்... Read more »
Ad Widget

ரத்தக்காயங்களுடன் நபர் ஒருவரின் சடலம் மீட்பு!

அங்குருவத்தோட்ட, வெனிவேல்பிட்டிய பிரதேசத்தில் வயல் ஒன்றில் சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்த நபர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. வயல் ஒன்றின் வரப்பில் இரத்தக் காயங்களுடன் ஒருவர் உயிரிழந்துள்ளதாக அங்குருவத்தோட்ட பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டின் அடிப்படையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. பொலிஸாரின் விசாரணைகளின் படி உயிரிழந்தவர் வெனிவெல்பிட்டிய, ஹல்தோட்டை... Read more »

இலங்கையின் தமிழ் பிரபஞ்ச அழகியாக தமிழ் பெண் தெரிவு!

இலங்கையின் முதலாவது திருமணமாகாத அழகு ராணியாக தெரிவு செய்யப்பட்டு கிரிடம் சூட்டப்பட்டுள்ளார். அம்பாறை மாவட்ட காரைதீவைச் சேர்ந்த நிவேதிகா இராசையா மிஸ் யுனிவர்ஸ் தமிழ் 2023 பட்டம் வென்றுள்ளார். அவரது அழகும், புத்திசாலித்தனமும், வசீகரமும் அவரை உண்மையிலேயே வேறுபடுத்திக் காட்டியுள்ளன. வெற்றி, வளர்ச்சி மற்றும்... Read more »

வடக்கு மாகாண கல்வி தரத்தை மேம்படுத்த பூரண ஒத்துழைப்பு

வடக்கு மாகாண கல்வித் தரத்தை மேம்படுத்துவதற்கு பூரண ஒத்துழைப்பை வழங்குவோம் – வட மாகாண அதிபர்கள் சங்கம், ஆளுநரிடம் உறுதி. வடக்கு மாகாண கல்வித்துறையில் ஏற்பட்டுள்ள பின்னடைவை சரி செய்வதற்கு தேவையான பூரண ஒத்துழைப்பை வழங்குவதாக வட மாகாண அதிபர்கள் சங்கம், மாகாண கௌரவ... Read more »

சிறுப்பிட்டியில் மெய்ப்பொருள் நாயனார் குருபூஜை விழா

சிறுப்பிட்டியில் மெய்ப்பொருள் நாயனார் குருபூஜை விழா சிறப்பாக நடைபெற்றது. சைவ வாழ்வியலில் பெரிய புராணம் பெறும் முக்கியத்துவம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் முகமகாச் சிவஸ்ரீ. பால.திருகுணானந்தக்குருக்கள் அவர்கள் நடாத்தும் வாராந்தப் பெரியபுராணச் சிறப்புச் சொற்பொழிவும், மாதத்தோறும் நாயன்மார் குருபூஜை விழா தொடர் 08 மெய்ப்பொருள்... Read more »

கந்தஷட்டி விரத காலத்தில் முருக நாம பஜனையும் புராண படன நிகழ்வும்

இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் ஏற்பாட்டில் நல்லூர் ஸ்ரீலஸ்ரீ ஆறுமுக நாவலர் மணிமண்டபத்தில் முருக நாம பஜனையும் புராண படன நிகழ்வும் கந்தசஷ்டி விரத காலத்தில் 14.11.2023 செவ்வாய்க்கிழமை தொடக்கம் 18.11.2023 சனிக்கிழமை  முன்னெடுக்கப்பட்டது. அந்தவகையில் 18.11.2023 சனிக்கிழமை காலை மட்டுவில் ஓம்... Read more »

ரெலோ யாழ். மாவட்ட அமைப்பாளராக சபா குகதாஸ்

தமிழ் ஈழ விடுதலை இயக்கம் ( ரெலோ) தனது 11 ஆவது மாநாட்டை நடத்துவதற்கு முன் ஆயத்தமாக மாவட்ட நிர்வாகங்களை புதிப்பித்து வருகின்றது. அதற்கமைவாக யாழ். மாவட்ட நிர்வாகத் தெரிவுக் கூட்டம் 18/11/2023 சனிக்கிழமை யாழ். நகரப்பகுதியில் நடைபெற்றது. இதில் யாழ். மாவட்ட உறுப்பினர்கள்... Read more »

மீண்டும் ஆரம்பிக்கப்படும் கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி அகழ்வு!

கொக்குதொடுவாய் மனித புதைகுழி அகழ்வு பணியானது ஏற்கனவே திட்டமிட்டபடி இன்று 20 ஆம் திகதி ஆரம்பித்து தொடர்ச்சியாக இடம்பெறவுள்ளதாக முல்லைத்தீவு மாவட்ட பொது வைத்தியசாலையின் சட்ட வைத்திய நிபுணர் கனகசபாபதி வாசுதேவ தெரிவித்துள்ளார். அகழ்வுப்பணி தொடர்பாக நேற்று (19.11.2023) தொடர்பு கொண்டு வினவிய போதே... Read more »

வெள்ளபெருக்கு தொடர்பில் மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

நாடளாவிய ரீதியில் தொடர்ச்சியாக பெய்து வரும் மழைவீழ்ச்சி காரணமாக நாட்டின் சில பிரதேசங்களுக்கு வெள்ளப்பெருக்கு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அடுத்த 24 மணித்தியாலங்களுக்குள் அலவ்வ, திவுலப்பிட்டிய, மீரிகம, பன்னல, வென்னப்புவ, நீர்கொழும்பு, கட்டான மற்றும் தங்கொடுவ ஆகிய பிரதேச செயலகங்களுக்குட்பட்ட மஹா ஓயாவின் தாழ்வான... Read more »