அரசாங்கத்தின் கன்னி வரவு செலவுத்திட்டம் திங்களன்று

இந்த ஆண்டுக்கான அரசாங்க வரவு செலவுத் திட்டம் எதிர்வரும் திங்கட்கிழமை (17) பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட உள்ளது. ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க பதவியேற்ற பிறகு சமர்ப்பிக்கும் முதல் வரவு செலவுத்திட்டம் இதுவாகும். அதன்படி, எதிர்வரும் திங்கட்கிழமை காலை 10.30 மணிக்கு நாடாளுமன்றம் கூட உள்ளது.... Read more »

இன்று முதல் தினசரி மின்வெட்டு இல்லை

இன்று (14) முதல் தினசரி மின்வெட்டு இருக்காது என்று மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சகம் தெரிவித்துள்ளது. தேசிய மின்சார அமைப்பில் ஏற்பட்ட ஏற்றத்தாழ்வு காரணமாக, நுரைச்சோலை நிலக்கரி மின் நிலையத்தில் உள்ள மூன்று ஜெனரேட்டர்களும் கடந்த ஞாயிற்றுக்கிழமை செயலிழந்தன. இருப்பினும், தடையின்றி மின்சாரம் வழங்குவதில்... Read more »
Ad Widget

சதொச ஊடாக மீன்களை விற்பனை செய்வதற்குத் தேவையான நடவடிக்கையை விரைவாக எடுக்க எதிர்பார்ப்பு

இந்திய மீனவர்கள் இலங்கை கடல் எல்லைக்குள் சட்டவிரோதமாக நுழைவதைத் தடுக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் ராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார். கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுவின் முதலாவது... Read more »

மஹிந்தவின் இல்லத்திற்கான நீர் விநியோக துண்டிப்பு தொடர்பில் அறிக்கை

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் உத்தியோகபூர்வ இல்லத்திற்கான நீர் விநியோகம் துண்டிக்கப்பட்டுள்ளதாக ஊடகங்களில் வெளியான செய்தி தொடர்பான அறிக்கையை தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை வௌியிட்டுள்ளது. முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் விஜேராம மாவத்தையில் உள்ள உத்தியோகபூர்வ இல்லத்திற்கான நீர் விநியோகம்... Read more »

உள்ளூராட்சிமன்ற தேர்தல் தொடர்பான உயர்நீதிமன்ற தீர்ப்பை அறிவித்த சபாநாயகர்

உள்ளூராட்சிமன்றத் தேர்தல் தொடர்பான விசேட சட்டமூலம் தொடர்பில் உயர் நீதிமன்றம் தெரிவித்த கருத்துகள் தொடர்பில் சபாநாயகர் வைத்திய கலாநிதி ஜகத் விக்ரமரத்ன பாராளுமன்றில் இன்று (14) அறிவித்தார். இது தொடர்பில் பாராளுமன்றம் விடுத்துள்ள விசேட அறிக்கை பின்வருமாறு, “அரசியலமைப்பின் 121 (1)ஆம் உறுப்புரையின் பிரகாரம்... Read more »

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸ சட்டத்துறையில் பட்டம் பெற்றது தொடர்பாக CID விசாரணை.

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸ சட்டத்துறையில் பட்டம் பெற்றது தொடர்பாக CID விசாரணை நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸ எவ்வாறு சட்ட இளமாணி பட்டத்தை பெற்றார் என்பது குறித்து விசாரிக்க குற்றப் புலனாய்வுத் துறைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக தெரியவருகிறது. நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸ சட்ட... Read more »

தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் பைசாலின் வாகனம் விபத்து.. ஒருவர் பலி ..

வாகன விபத்து தொடர்பில் தேசிய மக்கள் சக்தி புத்தளம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் முஹம்மது பைசலின் சகோதரரை பொலிஸார் கைது செய்துள்ளனர். இன்று (14) காலை கொஸ்வத்த, ஹல்ததுவன பிரதேசத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் நாடாளுமன்றத்திற்கு சென்று கொண்டிருந்த வேளையில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார்... Read more »

இலங்கை காற்றாலை திட்டத்திலிருந்து அதானி விலகியதால் ஏற்பட்ட விளைவு!

இலங்கையில் முன்மொழியப்பட்ட காற்றாலை மின் உற்பத்தி மற்றும் பரிமாற்றத் திட்டத்திலிருந்து அதானி கிரீன் எனர்ஜி நிறுவனம் விலகுவதாக வெளியான செய்திகளைத் தொடர்ந்து, அதன் பங்குகள் 3% உயர்வை சந்தித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இது, அந்தத் திட்டத்தின் நம்பகத்தன்மை குறித்த கவலைகளைத் தணித்துள்ளதாக, இந்திய ஊடகங்கள் செய்தி... Read more »

லசந்த கொலை வழக்கில் திடீர் திருப்பம்

ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்கவின் கொலை வழக்கில் மூன்று சந்தேக நபர்களை விடுதலை செய்யுமாறு குற்றப் புலனாய்வு பிரிவிக்கு 2025 ஜனவரி 27ஆம் திகதி சட்டமா அதிபரால் பிறப்பிக்கப்பட்ட உத்தரவு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படுவதாக, சட்டமா அதிபர் இன்று (13) கல்கிஸை நீதவான் நீதிமன்றத்திற்கு எழுத்து... Read more »

‘3 சந்தேகநபர்களை விடுவித்த வழக்கில் சட்டமா அதிபர் மீது தவறில்லை’

சட்டமா அதிபரை பதவியில் இருந்து நீக்கும் எந்தவொரு முயற்சிக்கும் எதிராக அவரைப் பாதுகாக்கத் தயங்கமாட்டோம் என்று சட்டமா அதிபர் திணைக்களத்தின் சட்ட அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. அண்மையில் சட்டமா அதிபர் குறித்து வெளியிடப்படும் தவறான மற்றும் ஏமாற்று கருத்துக்கள் குறித்து தனது சங்கம் ஆழ்ந்த... Read more »