நல்லூர் ஆலயத்தில் திருட்டில் ஈடுபட்ட நபரொருவர் கைது

நல்லூரில் பக்தர் போல பாசாங்கு செய்து ஏனைய பக்தர்களிடம் திருட்டு சம்பவங்களில் ஈடுபட்ட வெளி மாவட்டத்தைச் சேர்ந்த ஒருவரை பொலிஸார் இன்றைய தினம் (24) கைது செய்துள்ளனர். இது குறித்து மேலும் தெரியவருவதாவது, நல்லூர் கந்தசாமி ஆலய மகோற்சவம் இடம்பெற்று வரும் நிலையில், ஆலயத்துக்குள்... Read more »

நாட்டிலுள்ள அரிசி ஆலைகள் தீவிர கண்காணிப்பில்!

நாடு முழுவதிலுமுள்ள அரிசி ஆலைகளை கண்காணிக்கும் நடவடிக்கைகளில் மத்திய சுற்றாடல் அதிகாரசபை ஈடுபட்டுள்ளது. சுற்றாடல் அமைச்சர் நஸீர் அஹமட்டின் பணிப்புரைக்கமைய மத்திய சுற்றாடல் அதிகார சபை இந்த நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது. அரிசி ஆலைகள், சுற்றாடலில் ஏற்படுத்தும் தாக்கம் பற்றி ஆராய்வது மற்றும் சுற்றாடல் மாசடைவதை... Read more »
Ad Widget

பல மாணவர்களை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய அதிபர் கைது!

இரத்தினபுரியில் உள்ள முன்னணி பாடசாலை ஒன்றின் அதிபர், பல மாணவர்களை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை (NCPA) தெரிவித்துள்ளது. தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபைக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில்... Read more »

மின்சார மோட்டார் சைக்கிளை இறக்குமதி செய்வதற்க்கான புதிய வர்த்தமானி வெளியீடு!

மின்சார மோட்டார் சைக்கிள்கள் மற்றும் சைக்கிள்களை உரிமத்தின் கீழ் இறக்குமதி செய்வதற்கு அனுமதியளிக்கும் வர்த்தமானி அறிவித்தலை நிதி அமைச்சர் வெளியிட்டுள்ளார். ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நிதியமைச்சர் என்ற வகையில் நேற்று (23) முதல் அமுலுக்கு வரும் வகையில் இந்த அனுமதியை வழங்கியுள்ளார். இதன்படி, மின்சார... Read more »

யாழில் பேருந்தில் பயணித்த மூதாட்டி உயிரிழப்பு!

யாழ்ப்பாணத்தில் இருந்து கொடிகாமம் சந்தைக்கு தேங்காய் கொள்வனவு செய்ய பேருந்தில்சென்ற மூதாட்டி திடீர் நெஞ்சு வலி காரணமாக உயிரிழந்துள்ளார். சம்பவத்தில் யாழ்ப்பாணம் குருநகர் பகுதியை சேர்ந்த செபநாயகம் செல்வமலர் (வயது 64) என்பவரே உயிரிழந்துள்ளார். குறித்த மூதாட்டி நேற்றையதினம் பேருந்தில் பயணித்துக்கொண்டிருந்த வேளை, திடீரென... Read more »

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் வெளியிட்டுள்ள அறிவிப்பு!

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம், உற்பத்தி தொழிற்சாலைகளுக்கு டேங்கர்களாகவும், நிறுவனங்களுக்கு டொலரில் செலுத்துவதற்கும் எரிபொருள் விநியோகத்தை தற்காலிகமாக இடைநிறுத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனை சிரேஷ்ட அதிகாரி ஒருவர் இன்று தெரிவித்ததாகவும் கூறப்படுகின்றது. இந்த இரண்டு அமைப்புகளுக்கும் ஊக்கமளிக்கும் வகையில் புதிய தொழிற்சாலைகள் மற்றும் நிறுவனங்களின் பதிவு... Read more »

100ஆவது பிறந்த நாள் அன்று கைது செய்யப்பட்ட பெண்

ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ஜீன் பிகெண்டனின் (Jean Bickenton) என்ற பெண்மணி தனது 100வது பிறந்தநாளில் தன்னை கைது செய்ய வேண்டும் என்று ஆசை பட்டுள்ளார். அதனை தொடர்ந்து தனது 100 ஆவது பிறந்தநாளை கொண்டாடிய நிலையில் தனது ஆசையை நிறைவேற்ற பொலிஸார் அங்கு வந்து... Read more »

வரவு செலவு திட்டம் குறித்து வெளியாகியுள்ள அறிவிப்பு!

நிதியமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் திருத்தப்பட்ட வரவு செலவுத் திட்டம், ஆகஸ்ட் 30 ஆம் திகதி நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது. அன்றைய தினம் பிற்பகல் 1 மணிக்கு நாடாளுமன்றம் கூடும் எனவும், வரவு செலவுத் திட்ட உரை பிற்பகல் 2 மணி வரை... Read more »

யாழில் மது போதையில் பேருந்து செலுத்திய சாரதி கைது!

மதுபோதையில் பயணிகள் பேருந்தை செலுத்தி சென்ற இலங்கை போக்குவரத்து சபையின் சாரதி மானிப்பாய் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். யாழ்ப்பாணத்தில் இருந்து நேற்று(23) இரவு 7 மணியளவில் காரைநகர் நோக்கி பயணிகளை ஏற்றிக்கொண்டு பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்தினை செலுத்திய சாரதி மது... Read more »

சிகிச்சைகளுக்காக வெளிநாடு செல்லும் சோனியா காந்தி

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி கடந்த சில ஆண்டுகளாக உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வருகிறார். இதன் காரணமாக அவரால் தீவிர அரசியல் பணிகளில் ஈடுபட இயலவில்லை. என்றாலும், காங்கிரஸ் தலைவர் பதவியை ராகுல் காந்தி ராஜினாமா செய்ததால் இடைக்கால தலைவராக சோனியா பொறுப்பேற்று கட்சி பணிகளை... Read more »