பொலிஸ் மா அதிபர் அல்லது பதில் பொலிஸ் மா அதிபர் ஒருவரை நியமிக்குமாறு ஜனாதிபதியின் செயலாளருக்கு எழுத்து மூலம் அறிவிக்க தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல்.ரத்நாயக்க தெரிவித்துள்ளார். தேர்தல்கள் ஆணைக்குழு இன்று செவ்வாய்க்கிழமை ஒன்றுகூடிய போது இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. மேலும், ஜனாதிபதித்... Read more »
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் 50 இற்கும் அதிகமான நாடாளுமன்ற உறுப்பினர்கள் இன்று செவ்வாய்க்கிழமை மாலை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை சந்தித்து தமது ஆதரவை வெளிப்படுத்த உள்ளனர். பொதுஜன பெரமுன நேற்று திங்கட்கிழமை தமது கட்சி சார்பில் ஜனாதிபதி வேட்பாளர் ஒருவர் களமிறக்கப்பட உள்ளதாக அறிவித்த... Read more »
இந்தியாவின் கேரளாவில் ஏற்பட்ட மண்சரிவு காரணமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 89 ஆக உயர்வடைந்துள்ளது. கேரளாவை புரட்டிப்போட்ட மண்சரிவு – 89 பேர் பலி இந்தியா,கேரளாவில் கடந்த சில நாட்களாக கன மழை பெய்து வருகின்றது. தொடர்ச்சியாக நேற்று திங்கட்கிழமை இரவு பெய்த கன மழையின்... Read more »
எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸவுக்கும், ஐக்கிய மக்கள் சக்தி தலைமையிலான கூட்டணியில் அங்கம் வகிக்கும் பங்காளிக் கட்சிகளின் தலைவர்களுக்கும் இடையிலான விசேட சந்திப்பு எதிர்வரும் முதலாம் திகதி நடைபெறவுள்ளது. ஐக்கிய மக்கள் சக்தி கூட்டணி எதிர்வரும் 8 ஆம் திகதி மலரவுள்ளதுடன், அன்றைய நாளில்... Read more »
ஒரே ஒலிம்பிக்கில் இந்தியா சார்பில் இரண்டு பதக்கங்களை வென்ற முதல் வீராங்கனை என்ற பெருமையை மனு பாக்கர் பெற்றுள்ளார். 2024 பாரிஸ் ஒலிம்பிக்கில் இந்தியாவின் துப்பாக்கி சுடுதல் வீரரான மனு பாக்கர் ஒரே ஒலிம்பிக்கில் இரண்டு பதக்கங்களை வென்ற முதல் இந்தியப் பெண்மணி என்ற... Read more »
பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் நடைபெற்று வரும் ஒலிம்பிக் போட்டியில் நான்காம் நாளான இன்று இந்தியாவுக்கு மற்றொரு வெண்கலப் பதக்கம் கிடைத்துள்ளது. ஏர் பிஸ்டல் ஆண்கள் (air pistol) பிரிவு போட்டியில் பங்குபற்றிய பாகர் சரபோஜித் சிங் (Bhaker-Sarabjot Singh) என்பவரே இவ்வாறு வெண்கலப் பதக்கத்தை... Read more »
இந்திய பிரதமர் நரேந்திர மோடி எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் இலங்கைக்கு அதிகாரப்பூர்வ பயணம் மேற்கொள்ள உள்ளதாக தகவல்கள் வெளியாகியிருந்ததுடன், அதனை உறுதிப்படுத்தும் வகையில் அண்மையில் இலங்கைக்கு பயணம் மேற்கொண்டிருந்த வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கரும் உறுதிப்படுத்தியிருந்தார். இந்த நிலையில் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலுக்கு முன் மோடி... Read more »
இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் ஒயிட்-போல் தலைமை பயிற்சியாளர் மேத்யூ மோட் அடுத்த வாரம் தமது பதவியை இராஜினாமா செய்யவுள்ளார். இந்நிலையில், அந்தப் பதவிக்கு இலங்கை அணியின் முன்னாள் தலைவரும், ராஜஸ்தான் ரோயல்ஸ் அணியின் தலைமைப் பயிற்சியாளருமான குமார் சங்கக்கார போட்டியிட உள்ளதாக சர்வதேச ஊடகங்கள்... Read more »
பிரான்ஸ் தலைநகர் பாரிசில் 2024 ஆம் ஆண்டுக்கான ஒலிம்பிக்ஸ் போட்டிகள் கடந்த சனிக்கிழமை ஆரம்பமாகி விறுவிறுப்பாக நடந்து வருகிறது. கடந்த சனிக்கிழமை போட்டி ஆரம்பமான போது பிரான்ஸ் நாட்டின் முக்கிய நகரங்களை இணைக்கும் பிரதான ரயில் வழித்தடங்களில் ஒரே நேரத்தில் திட்டமிட்டு தீ வைக்கப்பட்டது.... Read more »
மன்னார் – மதவாச்சி பிரதான வீதி, தம்பனைக்குளம் பகுதியைச் சேர்ந்த பட்டதாரியான இளம் தாய் ஒருவர் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். 27 வயதான மரியராஜ் சிந்துஜா என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இது குறித்து மேலும் தெரியவருவதாவது, உயிரிழந்த... Read more »

