அநுர ஜனாதிபதியானால் பிரதமராக பெண்: விஜித ஹேரத்!

தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் பிரதமர் ஒரு பெண்ணாக இருக்கலாம் என கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். செப்டெம்பர் 21ஆம் திகதி வெற்றி பெற்றதன் பின்னர் அரசியலமைப்பின் 47.3 சரத்தின் கீழ் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களுடன் புதிய அமைச்சரவையொன்று நியமிக்கப்பட்டு, நாடாளுமன்றம்... Read more »

போதைப்பொருளுக்கு அடிமையான பெண்களுக்கு புனர்வாழ்வு மையம் ஆரம்பம்

போதைப்பொருளுக்கு அடிமையான பெண்களை புனர்வாழ்வளிக்க விசேட நிலையமொன்றை நிறுவுவதற்கு புனர்வாழ்வு பணியகம் நடவடிக்கை எடுத்துள்ளது. வவுனியா பிரதேசத்தில் நிர்மாணிக்கப்பட்ட இந்த நிலையத்தில் 100 பெண்களுக்கு புனர்வாழ்வளிக்கப்பட முடியும் என தெரிவிக்கப்படுகிறது. அதன்படி, நீதிமன்ற உத்தரவுப்படி போதைப்பொருளுக்கு அடிமையான பெண்களுக்கு இந்த மையம் மூலம் மறுவாழ்வு... Read more »
Ad Widget

ஊழலை உண்மையாக கையாள்வதற்கு தலைவர்கள் தயாராக இல்லை !

இலங்கை அமைச்சர் ஒருவர் இலஞ்சம் கோரினார் என ஜப்பான் குற்றம் சாட்டியதாக ஜனாதிபதி வேட்பாளர் விஜயதாஸ ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் அரசாங்கத்தில் இருந்தபோது, ஜப்பானிடம் குறித்த அமைச்சர் இலஞ்சம் கோரியதாக விஜயதாச ராஜபக்ஸ, தெரிவித்துள்ளார் இந்தக் குற்றச்சாட்டுக்கள் காரணமாகவே கோட்டாபய... Read more »

தெரிவு செய்யப்படும் ஜனாதிபதியுடன் இணைந்து செயற்படத் தயார்: ஜூலி சங்

இலங்கை மக்களால் தெரிவுசெய்யப்படும் ஜனாதிபதியுடன் இணைந்து செயற்பட அமெரிக்கா எதிர்பார்த்துள்ளதாக, இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி தேர்தலை முன்னிட்டு அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங் தனது எக்ஸ் தளத்தில் இட்டுள்ள பதிவிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். சுதந்திரமானதும் நியாயமானதுமான தேர்தலை... Read more »

சஜித்தின் வெற்றியை உறுதிப்படுத்த மாளிகைக்காட்டில் கூட்டம்

ஐக்கிய மக்கள் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளரும், எதிர்க்கட்சி தலைவருமான சஜித் பிரேமதாசவை ஆதரித்து பொத்துவில் தேர்தல் தொகுதியின் மாளிகைக்காடு பிரதேச மகளிர் கருத்தரங்கு முஸ்லிம் காங்கிரஸின் மாளிகைக்காடு மத்திக்கிளை அமைப்பாளர் ஏ.எல்.எம். இம்தியாஸ் தலைமையில் நடைபெற்றது. இந் நிகழ்வில் முஸ்லிம் காங்கிரஸின் பிரதி தேசிய... Read more »

நாட்டு மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள முக்கிய அறிவிப்பு

இதுவரையில் உத்தியோகப்பூர்வ வாக்காளர் அட்டைகள் கிடைக்கப் பெறாதவர்கள், அருகில் உள்ள அஞ்சல் அலுவலகங்களில் அவற்றைப் பெற்றுக்கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது. குறித்த வாக்காளர் அட்டைகளை, எதிர்வரும் 18, 19, 20 மற்றும் 21ஆம் திகதிகளில் பெற்றுக்கொள்ள முடியுமென பிரதி அஞ்சல் மா அதிபர் ராஜித... Read more »

இலங்கையை உலுக்கிய பெரும் சோகம் – தாயும் மகனும் மரணம்!

தென்னிலங்கையில் மகனின் மரணத்தை தாங்கிக் கொள்ள முடியாத தாயும் உயிரிழந்த சோகமான சம்பவம் பலரையும் வேதனையில் ஆழ்த்தியுள்ளது. பிங்கிரிய, பிரசன்னகமகம்மன பகுதியை சேர்ந்த 45 வயதான இரண்டு பிள்ளைகளின் தந்தையான சஞ்சீவ பிரசன்ன மாரடைப்பால் உயிரிழந்துள்ளார். இதனை அறிந்த 70 வயதுடைய இரண்டு பிள்ளைகளின்... Read more »

வாகன இறக்குமதிக்கு அனுமதி: விலைகளில் ஏற்படவுள்ள மாற்றம்!

வாகன இறக்குமதி மீதான கட்டுப்பாடுகள் படிப்படியாக நீக்கப்படுவதோடு, அதிக வரி விதிப்பதிலும் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது. அதன்படி, வாகன இறக்குமதி தொடர்பான கட்டுப்பாடுகள் அடுத்த ஆண்டு (2025) முதல் நீக்கப்பட்டாலும், வாகன சுங்க கட்டணத்தை அதிகரிக்க வேண்டியிருக்கும் என வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி... Read more »

தேரர் ஒருவர் கைது- பொலிஸார் வெளியிட்ட காரணம்!

செல்லுபடியற்ற சாரதி அனுமதி பத்திரத்துடன் காரை செலுத்திச் சென்ற குற்றச்சாட்டில் தேரர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக குருணாகல் பொலிஸார் தெரிவித்துள்ளனர். கைது செய்யப்பட்ட தேரர், கண்டியில் இருந்து குளியாப்பிட்டிய கந்தானேகெதர பிரதேசத்தில் உள்ள விகாரையொன்றை நோக்கி காரில் பயணித்துக்கொண்டிருக்கும் போது குருணாகல் போக்குவரத்து பொலிஸாரால்... Read more »

தேர்தலில் ரணில் தோற்றாலும் ஆறு மாதங்களில் மீண்டும் ஜனாதிபதி!

எதிர்வரும் 21 ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தோற்றாலும், ஆறு மாதங்களில் மீண்டும் ஜனாதிபதியாவார் என இராஜாங்க அமைச்சர் அனுரத ஜயரட்ன தெரிவித்துள்ளார். ஜனாதிபதி ரணிலின் வெற்றியை உறுதி செய்ய இன மத பேதங்கள் இன்றி இணைந்து... Read more »