அமெரிக்க ஜ்னாதிபதி வேட்பாளர் கமலா ஹாரிஸுக்கு பில் கேட்ஸ் 50 மில்லியன் டாலர் நன்கொடை வழங்கியுள்ளார். அமெரிக்காவில் நவம்பர் மாதம் 5 ஆம் திகதி பொதுத்தேர்தல் நடைபெற உள்ளது. இதில் ஆளும் ஜனநாயக கட்சி சார்பில் துணை ஜனாதிபதி கமலா ஹாரிசும் , குடியரசு... Read more »
களுத்துறை வடக்கு, வஸ்கடுவ பிரதேசத்தில் உள்ள வீடொன்றிற்குள் நுழைந்து கட்டிலில் உறங்கிக்கொண்டிருந்த ஒன்றரை வயது சிறுமியின் கழுத்திலிருந்த தங்கச் சங்கிலியைத் திருடிச் சென்றதாகக் கூறப்படும் சந்தேக நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக களுத்துறை பொலிஸ் குற்றத் தடுப்பு பிரிவினர் தெரிவித்தனர். திருடப்பட்டதாக கூறப்படும் தங்கச் சங்கிலியின்... Read more »
களனி பல்கலைக்கழக விடுதி கட்டடத்தில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்த மாணவன் அளவுக்கு அதிகமாக மது அருந்தியிருந்தமை விசாரணையில் தெரியவந்துள்ளது. இன்று (23) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பிரதி பொலிஸ் மா அதிபர் நிஹால்... Read more »
காட்டு யானை மோதல்களை தவிர்க்க விசேட தீர்மானம் – ரயில்வே திணைக்களம்! காட்டு யானைகள் ரயில்களின் மீது மோதுவதை தவிர்க்கும் வகையில் ரயில்வே திணைக்களம் விசேட தீர்மானமொன்றை மேற்கொண்டுள்ளது. அண்மையில் கொழும்பில் இருந்து மட்டக்களப்புக்கு எரிபொருள் ஏற்றிச் சென்ற ரயிலுடன் காட்டு யானைக் கூட்டம்... Read more »
கடலோரப் பாதுகாப்புத் திணைக்களப் பணிப்பாளர் நாயகமாக வை.ஆர்.சேரசிங்க நியமனம்! இலங்கை கடலோரப் பாதுகாப்புத் திணைக்களப் பணிப்பாளர் நாயகமாக கடமையாற்றிய றியர் அட்மிரால் பீ.விதான 55 வயது பூர்த்தியடைந்தமையால் 2024.09.13 ஆம் திகதியன்று ஓய்வு பெற்றுள்ளார். அதற்கமைய, வெற்றிடமாகியுள்ள பதவிக்கு தற்போது கடலோரப் பாதுகாப்புத் திணைக்களத்தில்... Read more »
முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் விளக்கமறியலில்! முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவை எதிர்வரும் 30ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க கோட்டை நீதவான் நீதிமன்றம் இன்று (23) உத்தரவிடப்பட்டுள்ளது. கொழும்பில் உள்ள ஹோட்டல் ஒன்றின் வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சட்டவிரோதமாக தயாரிக்கப்பட்ட சொகுசு வாகனம் தொடர்பில்... Read more »
மட்டக்களப்பு சீயோன் தேவாலயத்தை அண்மித்தாக கைதானோர் குருணாகலை சேர்ந்தோரே! மட்டக்களப்பு சீயோன் தேவாலயத்தை அண்மித்த பகுதியில் சந்தேகத்துக்கிடமாக நடமாடிய சந்தேகத்தில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். குருணாகல் சேர்ந்த குறித்த நபர்களான வயது 35, 25 உடைய இருவரையே இன்று (23) கைதுசெய்துள்ளதாக மட்டக்களப்பு தலைமையகப்... Read more »
பாகிஸ்தான், ஈரானிய பிரஜைகள் பத்துப் பேருக்கு நீர்கொழும்பு மேல் நீதிமன்றம் மரண தண்டனை விதிப்பு! 10 வெளிநாட்டவர்களுக்கு நீர்கொழும்பு மேல் நீதிமன்றம் மரண தண்டனை விதித்துள்ளது. 2016 ஆம் ஆண்டில், 146 கிலோ ஹெராயின் வைத்திருந்தமை தொடர்பிலேயே 10 வெளிநாட்டவர்களுக்கு எதிராக குற்றச்சாட்டுகள் பதிவு... Read more »
இலங்கையில் தங்கியுள்ள வெளிநாட்டவர் பாதுகாப்புக்கு உறுதி: -பதில் பொலிஸ் மா அதிபர்! நாட்டிலுள்ள அனைத்து வெளிநாட்டுப்பிரஜகளின பாதுகாப்பும் உறுதிப்படுத்தப்பட்டு அது தொடர்பில் அனைத்து தூதரகங்களுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் பதில் பொலிஸ்மா அதிபர் பிரியந்த வீரசூரிய தெரிவித்துள்ளார். அறுகம்பை பாதுகாப்பு நிலைமைகள் தொடர்பில் கருத்து வெளியிடும் போதே... Read more »
வேட்புமனுக்கள் நிராகரிப்புக்கு எதிரான இரு மனுக்கள் தொடர்பில் உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு! எதிர்வரும் நவம்பர் 14ஆம் திகதி நடைபெறவுள்ள பாராளுமன்றத் தேர்தலுக்காக வன்னி தேர்தல் மாவட்டத்தில் ஜனநாயக தேசிய கூட்டணி தாக்கல் செய்த வேட்புமனுவை நிராகரிப்பதற்கு மாவட்ட தெரிவத்தாட்சி அதிகாரி மேற்கொண்ட தீர்மானத்தை வலுவற்றதாக்கி உயர்நீதிமன்றம்... Read more »

