ஸ்கொட்லாந்திடம் தோற்ற ஸ்பெய்ன்

ஐரோப்பிய கால்பந்தாட்டச் சங்கங்களின் ஒன்றியத்தின் யூரோ கிண்ணத் தொடருக்கான தகுதிகாண் போட்டிகளில், ஸ்கொட்லாந்தில் நேற்று அதிகாலை நடைபெற்ற அவ்வணியுடனான போட்டியில் 0-2 என்ற கோல் கணக்கில் ஸ்பெய்ன் தோற்றது. ஸ்கொட்லாந்து சார்பாகப் பெறப்பட்ட இரண்டு கோல்களையும் ஸ்கொட் மக்டொமினி பெற்றிருந்தார். Read more »

இலங்கை நியூசிலாந்து : நாளை மூன்றாவது போட்டி

நியூசிலாந்து, இலங்கை அணிகளுக்கிடையிலான மூன்றாவது ஒருநாள் சர்வதேசப் போட்டியானது, ஹமில்டனில் நாளை காலை 6.30 மணிக்கு நடைபெறவுள்ளது. மூன்று போட்டிகள் கொண்ட இத்தொடரின் முதலாவது போட்டியை நியூசிலாந்து வென்றதுடன், மழையால் இரண்டாவது போட்டி கைவிடப்பட்ட நிலையில், தொடரைச் சமப்படுத்துவதற்கு இப்போட்டியை இலங்கை கட்டாயம் வென்றாக... Read more »

ஜேர்மனியை வென்ற பெல்ஜியம்

ஜேர்மனியில் நேற்று அதிகாலை நடைபெற்ற சிநேகபூர்வப் போட்டியொன்றில் 3-2 என்ற கோல் கணக்கில் அவ்வணியை பெல்ஜியம் வென்றது. பெல்ஜியம் சார்பாக, யனிக் கராஸ்கோ, றொமெலு லுக்காக்கு, கெவின் டி ப்ரூனே ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றனர். ஜேர்மனி சார்பாக, நிக்லஸ் புல்குரூக், சேர்ஜி... Read more »

அமெரிக்காவில் கொலைகளமாக மாறிய பாடசாலைகள்.

டென்னசி நாஸ்வில்லியின் கொன்வென்ட் பாடசாலையில் கல்விபயிலும் 200 மாணவர்களும்(தனியார் கிறிஸ்தவ ஆரம்ப பாடசாலை) ஒவ்வொரு நாளும் தங்கள் கற்றல் நடவடிக்கைகளை தேவாலயத்தில் ஆரம்பிப்பதுடன் வாரத்திற்கு இரண்டு தடவை பைபிள்வாசிப்பார்கள். இந்த பாடசாலையின் அழகே அதன் எளிமை மற்றும் அப்பாவித்தனத்தில் உள்ளது என பாடசாலையில் இணையத்தளத்தின்... Read more »

CSK ரசிகர்கள் கூட்டம் நிரம்பி வழியும்! ஹஸ்ஸி உற்சாகம்

2019 ம் ஆண்டுக்கு பிறகு சென்னை சேப்பாக்கத்தில் விளையாட இருப்பதால் ரசிகர்கள் கூட்டம் நிரம்பி வழிய போகிறது என சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பேட்டிங் பயிற்சியாளர் மைக் ஹஸ்ஸி தெரிவித்துள்ளார். சமீபத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பேட்டிங் பயிற்சியாளர் மைக் ஹஸ்ஸி... Read more »

நெதர்லாந்தில் விந்தணு தானம் செய்த 550 குழந்தைகளின் தந்தை….

நெதர்லாந்தில், விந்தணு தானம் செய்பவர் சுமார் 550 குழந்தைகளுக்குத் தந்தையாகியுள்ளார். இந்நிலையில், சகோதர முறை கொண்ட அவர்கள் தற்செயலாக உறவில் ஈடுபடும் அபாயத்தை அதிகரிக்கக்கூடும் என்பதால், அந்த நபர் சட்ட நடவடிக்கையை எதிர்கொண்டுள்ளார். அவர் கிளினிக்குகளை தவறாக வழிநடத்தியதாகவும், குழந்தைகளை உளவியல் ரீதியாக ஆபத்தில்... Read more »

குப்பை எரிக்கும் தளங்கள் முடக்கம் – குப்பைகள் தேங்கும் அபாயம்!

நேற்றிரவுடன் மாநகரசபைகளின் குப்பைகள் அகற்றும் தொழிலாளர்களின் பணிப்புறக்கணிப்பு முடிவடைவதாக அறிவித்திருந்தனர். ஆனால் இன்று காலை பரிசில் குப்பைகளை அகற்றிய வாகனங்கள் அதன் குப்பைகளை எரிக்கும் முக்கிய தளமான Issy les moulineaux எரிப்பகத்திற்குச் சென்றவேளை இந்த எரிப்பகம் தொழிற்சங்கங்களினால் முடக்கப்பட்டுள்ளது. குப்பை ஏற்றிவந்த மாநகரசபை... Read more »

உள்துறை அமைச்சரின் மருமகள் கைது!

உள்துறை அமைச்சர் Gérald Darmanin மருமகள் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவருடன் ஜொந்தாம் அதிகாரி ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார். பிரான்சின் தென்மேற்கு நகரமான Périgueux இல் வைத்து இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். அங்குள்ள பல்பொருள் அங்காடியில் பாதுகாப்பு அதிகாரியாக பணிபுரியும் நிலையில், ஜொந்தாம் அதிகாரி... Read more »

சவால்களுக்கு முகங்கொடுக்கக் கூடிய மாணவர் சமுதாயத்தை நாம் உருவாக்க வேண்டும்-கலையரசன்

எமது மாணவ சமூகத்தில் மனவலிமை குறைந்தமையினாலேயே இன்று மாணவர் தற்கொலைகள் அதிகரித்துக் கொண்டு வருகின்றன. இந்தச் சமூகத்திலே ஏற்படுகின்ற சவால்களுக்கு முகங்கொடுக்கக் கூடிய மாணவர் சமுதாயத்தை நாம் உருவாக்க வேண்டும். கல்வியென்பதுடன் விளையாட்டினையும் சேர்த்து கட்டியெழுப்புவதன் ஊடாகவே மாணவர்கள் மத்தியில் மனவலிமையை ஏற்படுத்த முடியும்... Read more »

கோர விபத்தில் உயிரிழந்த பிரபல சமூக செயற்பாட்டாளர்!

அக்கரைப்பற்று சுவாட் (SWOAD) அமைப்பின் தலைவரும் அம்பாறை மாவட்ட அரச சார்பற்ற இணையத்தின் (NGOs Consortium) தவிசாளரும், பிரபல சமூக செயற்பாட்டாளருமான வடிவேல் பரமசிங்கம் விபத்தில் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருக்கோவில் தம்பட்டையைச் சேர்ந்த வடிவேல் பரமசிங்கம் கொழும்பு செல்லும் வழியில் செவனப்பிட்டியில்... Read more »