விலானகம பகுதியிலுள்ள வீடொன்றில் மான் கறி தயாரித்துக்கொண்டிருந்த 17 வயதுடைய சிறுமி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது அலவத்துகொட பொலிஸாரால் அச் சிறுமி கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வீட்டுக்கு அருகில் உள்ள தேயிலைத் தோட்டத்தில் மான் ஒன்று கொல்லப்பட்டுள்ளதாகவும் வீட்டில் மான்... Read more »
சாரதி அனுமதிப்பத்திரம் இன்றி மோட்டார் சைக்கிளைச் செலுத்திய நபருக்கு எதிராக நீதிமன்றில் வழக்குத் தொடரப்படுவதைத் தவிர்ப்பதற்காக குறித்த நபரிடமிருந்து 1, 000 ரூபாவை இலஞ்சமாகப் பெற்ற பொலிஸார் பணி இடை நுறுத்தப்பட்டுள்ளனர். சம்பவத்தில் கந்தளாய் தலைமையகப் பொலிஸ் நிலையத்தைச் சேர்ந்த பொலிஸ் சார்ஜன்ட் மற்றும்... Read more »
சுவிஸ் வங்கியில் கணக்கு வைத்துள்ள இந்தியர்களின் 5வது பட்டியலை சுவிட்சர்லாந்து அரசாங்கம் வெளியிட்டுள்ளது. கருப்புப் பணம் பதுக்கலைத் தடுக்கும் வகையில் கடந்த 2019 ஆம் ஆண்டு முதல் இந்தியாவுடனான தகவல் பரிமாற்ற ஒப்பந்தப்படி வங்கிக்கணக்கு வைத்துள்ளவர்களின் பட்டியலை சுவிஸ் அரசு வெளியிட்டு வருகின்றது. 36... Read more »
முல்லைத்தீவு வலையத்தில் உள்ள பிரபல பாடசாலை ஒன்றில் நேற்று திங்கட்கிழமை ஆசிரியர் தின நிகழ்வில் பாடசாலைக்குள் புகுந்த வன்முறை கும்பல் மோதலில் ஈடுபட்டது. குறித்த சம்பவம் தொடர்பில் தெரிய வருவதாவது குறித்த பாடசாலையில் ஆசிரியர் தின நிகழ்வுகள் இடம் பெற்றுக் கொண்டிருந்த நிலையில் வெளியிலிருந்து... Read more »
கல்வி அமைச்சினால் நடாத்தப்படும் அகில இலங்கைப் பாடசாலைகளுக்கிடையிலான பெண்களுக்கான உதைபந்தாட்டப் போட்டியில் பொலநறுவை பென்டிவெவா மத்திய கல்லூரி 20 வயதின் கீழ் பெண்கள் அணியினர் முதலாம் இடத்தை பெற்றுள்ளனர். இப்போட்டி இன்று திங்கள் காலை யாழ்ப்பாணம் தெல்லிப்பழை யூனியன் கல்லூரி மைதானத்தில் நடைபெற்றது. இறுதிப்போட்டியில்... Read more »
தேசியமட்ட பெண்கள் உதைபந்தாட்ட போட்டியில் 17 வயதுப் பிரிவில் தெல்லிப்பழை மஹாஜனா சாம்பியன்! கல்வி அமைச்சினால் நடாத்தப்படும் அகில இலங்கைப் பாடசாலைகளுக்கிடையிலான பெண்களுக்கான உதைபந்தாட்டப் போட்டியில் மகாஜனக் கல்லூரியின் 17 வயதுப் பிரிவு அணி சாம்பியனாகியுள்ளது. இப்போட்டி இன்று 09.10.2023 திங்கள் காலை 9.30... Read more »
தேசிய மின்சார அமைப்பிற்கு தினசரி 6.5% புதுப்பிக்கத்தக்க மின்சாரத்தை வழங்கும் திட்டம் 1.7 பில்லியன் அமெரிக்க டொலர்கள் செலவில் வட மாகாணத்தில் ஆரம்பிக்கப்படவுள்ளது. தேசிய மின்சார அமைப்பிற்கு தினமும் 6.5% புதுப்பிக்கத்தக்க மின்சாரத்தை வழங்கும் சூரிய சக்தி மின் அமைப்பு ஒன்றை அமைக்க நடவடிக்கை... Read more »
இஸ்ரேலில் இடம்பெற்ற தாக்குதல்கள் மற்றும் அங்கு வாழும் இலங்கையர்கள் மற்றும் இஸ்ரேலிய மக்கள் மீது ஏற்படுத்திய பாதிப்புகள் குறித்து உன்னிப்பாக அவதானம் செலுத்தி வருவதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று (09) அமைச்சரவைக்கு அறிவித்தார். அமைச்சரவைக்கு விசேட அறிவிப்பொன்றை முன்வைத்த ஜனாதிபதி, இஸ்ரேலில் பணிபுரியும்... Read more »
மட்டக்களப்பு – மயிலத்தமடு பகுதியில், 990க்கும் அதிகமான பண்ணையர்களை விரட்டியடித்தமைக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்றையதினம் அப்பகுதியில் போராட்டம் ஆரம்பமாகியுள்ளது. இந்த போராட்டம் இடம்பெறும் பகுதியில் அதிகளவிலான இராணுவத்தினர் மற்றும் பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளனர். அத்துடன் வானில் ஹெலிகாப்டரும் வட்டமிடுவதை அவதானிக்க முடிகின்றது. இதனால் அப்பகுதிக்குயில் வன்முறை... Read more »
இந்து சமுத்திர எல்லை நாடுகளின் சங்கத்தின் (IORA) தலைமைப் பதவி இலங்கைக்கு – இந்து சமுத்திர எல்லை நாடுகளின் சங்கத்தின் 23ஆவது அமைச்சர் மட்ட கூட்டம் ஒக்டோபர் 11 ஆம் திகதி கொழும்பில் இந்து சமுத்திர எல்லை நாடுகளின் சங்கத்தின் தலைமைப் பொறுப்பை இலங்கை... Read more »