பாடப்புத்தகங்கள் பெப்ரவரி 19க்கு முன்னர் வழங்கப்படும்

அடுத்த வருடம் பெப்ரவரி 19 ஆம் திகதிக்கு முன்னர் பாடசாலை மாணவர்களுக்கு பாடப்புத்தகங்கள் வழங்கப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். பாதீட்டில் கல்வித்துறைக்கான ஒதுக்கீடு தொடர்பான குழுநிலை விவாதத்தின் போது அவர் இதனைக் குறிப்பிட்டார். Read more »

யாழில் அதிகரித்து வரும் போதைப்பொருள் பாவனை

போதைப்பொருள் பாவனை அதிகரிப்பால், நுரையீரல் மற்றும் இருதய ‘வால்வு’ ஆகியவற்றில் கிருமி தொற்றுக்கு உள்ளாகி யாழ்.போதனா வைத்தியசாலைக்கு சிகிச்சைக்கு வருவோரின் எண்ணிக்கை உயர்வடைந்துள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன. அதில் பெருமளவானோர் 25 வயதிற்கும் குறைந்தவர்கள் என கூறப்படுகிறது. வெளிநாடுகளுக்கு செல்வதற்காக, இளைஞர்கள் பலர் மருத்துவ... Read more »
Ad Widget

25,000 குடும்பங்களுக்கு இலவச சூரிய மின்கலங்கள்

வட மாகாணத்திற்கான தலா 50 இலட்சம் ரூபா பெறுமதியான 25,000 சூரிய மின்கலங்களை வழங்க விண்ணப்பங்களை ஏற்கும் நடவடிக்கை இறுதி கட்டத்தை அடைந்துள்ளது. ஜனாதிபதியின் ஆலோசனைக்கு அமைய, வடக்கு மாகாணத்தில் ஆளுநரின் ஊடாக முன்னெடுக்கப்படவுள்ள இந்த திட்டத்திற்கான விண்ணப்பங்கள் மாவட்டச் செயலாளர்கள் மற்றும் பிரதேச... Read more »

நானுஓயாவில் வீதி தாழிறக்கம் சாரதிகளுக்கு பொலிஸார் எச்சரிக்கை

நுவரெலியா – ஹட்டன் ஏ7 பிரதான வீதியின் நானுஓயா சந்திக்கு அருகில் வீதி தாழிறங்கியுள்ளதால் ஒரு வழி போக்குவரத்து இடம்பெற்று வருவதாக நானுஓயா பொலிஸார் தெரிவித்துள்ளனர். கடந்த சில வருடங்களுக்கு முன்னர் குறித்த பகுதியில் சிறிய அளவிலான வெடிப்புக்கள் ஏற்பட்டிருந்த நிலையிலே தொடர்ந்து பெய்த... Read more »

களனி பல்கலையின் 4 மாணவர்கள் இடைநீக்கம்

களனி பல்கலைக்கழகத்தின் நான்கு மாணவர்கள் இடை நீக்கப்பட்டுள்ளனர். பல்கலைக்கழகத்தின் பாதுகாப்பு உத்தியோகத்தர் ஒருவரை கடத்தி, அவர் மீது தாக்குதல் நடத்திய சம்பவத்தின் அடிப்படையிலேயே இந்த இடைநீக்கம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக களனி பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது. Read more »

ஞாயிறு ஆராதனையில் பங்கேற்காத சிறுமியை தாக்கிய பங்குத் தந்தை

சாகவச்சேரியில் உள்ள தேவாலயத்தில் ஞாயிறு ஆராதனைக்கு செல்லவில்லை எனப் பங்குத் தந்தை ஒருவரால் தாக்கப்பட்ட சிறுமி ஒருவர் சாவகச்சேரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கொடிகாமம் பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பகுதியில் உள்ள தேவாலயம் ஒன்றின் பங்குத் தந்தையே இவ்வாறு சிறுமியைத் தாக்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சிறுமியின் தந்தை... Read more »

மகளை தாயாக்கிய நபருக்கு 12 வருட கடூழிய சிறைத்தண்டனை

வவுனியா சுந்தரபுரம் பகுதியில் தனது மகளை தாயாக்கிய ஒருவருக்கு 12 வருட கடூழிய சிறைத்தண்டனை விதித்து வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி தீர்ப்பளித்துள்ளார். நேற்று (04) இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது மேற்படி உத்தரவு வழங்கப்பட்டது. அத்துடன், துஷ்பிரயோகத்திற்கு உள்ளான மகளுக்கு 06... Read more »

மின்சாரத்தை துண்டிக்கச்சென்ற ஊழியர்கள் மீது தாக்குதல்

மின்சாரத்தை துண்டிக்கச்சென்ற மின்சார சபை ஊழியர்கள் இருவர் தாக்கப்பட்ட சம்பவம் கம்பஹாவில் பதிவாகியுள்ளது. தாக்குதலுக்கு இலக்கான இரு ஊழியர்களும் கம்பஹா மாவட்ட பொது வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக மின்சார சபையின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார். மின் கட்டணம் செலுத்தாத நிலையில், மின்சாரத்தை துண்டிக்க சென்ற... Read more »

டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை தொடர்ந்தும் அதிகரித்துள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது. தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு விடுத்துள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, இந்த வருடத்தின் இதுவரையிலான காலப்பகுதியில் மாத்திரம் 77,487 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதுடன், 746 பேர் உயிரிழந்துள்ளதாக... Read more »

2,600 கிராம உத்தியோகத்தர்கள் சேவைக்கு

புதிதாக 2600 கிராம உத்தியோகத்தர்கள் சேவையில் இணைத்துக் கொள்ளப்படவுள்ளதாக மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி இராஜாங்க அமைச்சர் ஜானக வக்கும்புர தெரிவித்துள்ளார். இதற்கான பரீட்சை நேற்று முன்தினம் நடத்தப்பட்டது. அதற்கமைய, எதிர்வரும் பெப்ரவரி மாதம் 4ஆம் திகதிக்கு முன்னர் கிராம உத்தியோகத்தர்கள் சேவையில் இணைத்துக்... Read more »