உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் மரத்தாலான வாக்குப்பெட்டிகளை மாத்திரம் பயன்படுத்த தேர்தல்கள் ஆணைக்குழு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த ஜனாதிபதித் தேர்தலில் பயன்படுத்தப்பட்ட பிளாஸ்த்ரிக் வாக்குப்பெட்டிகள், இம்முறைத் தேர்தலுக்கு பயன்படுத்தப்பட மாட்டாது என தேர்தல்கள் ஆணைக்குழுவின் உயரதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். அத்துடன், தேர்தல் திகதி அறிவிக்கப்பட்டதன்... Read more »
மேஷ ராசி அன்பர்களே! காரியங்கள் அனுகூலமாக முடியும். தந்தையின் தேவைகளை நிறைவேற்றி மகிழ்வீர்கள். மனதில் தன்னம்பிக்கை அதிகரிப்பதுடன் உற்சாகமும் பெருக்கெடுக்கும். துணிச்சலு டன் செயல்படுவீர்கள். எதிர்காலம் பற்றிய சிந்தனை மேலோங்கும். இளைய சகோதரர்கள் பணம் கேட்டு நச்சரிப்பார்கள். கணவன் – மனைவிக்கிடையே ஏற்பட்டிருந்த பிணக்குகள்... Read more »
வவுனியா ‘கெத்து பசங்க’ என்ற வட்ஸ்அப் குழுவை சேர்ந்த நான்கு பேரை விசேட அதிரடிப்படையினர் கைதுசெய்துள்ளனர். பூவரசங்குளம், தட்டான்குளம், செட்டிகுளம் ஆகிய பகுதிகளில் வன்முறைகளை ஏற்பாடு செய்த குழுவினரே இவ்வாறு கைதாகியுள்ளனர். சுற்றிவளைப்பு விசேட அதிரடிப்படை வவுனியா முகாம் அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் பிரகாரம்,நேற்று... Read more »
சீனாவினால் வழங்கப்பட்ட 6.98 மில்லியன் லீட்டர் டீசல் நாளை முதல் விவசாயிகளுக்கு விநியோகிக்கப்படும் என விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது. விவசாய அமைச்சினால் உருவாக்கப்பட்ட புதிய செயலி மூலம் விநியோக நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படும் என உயர் அதிகாரி ஒருவர் குறிப்பிட்டுள்ளார். ஒரு ஹெக்டேரில் பயிர் செய்யும்... Read more »
யாழ் மாநகர சபையின் கட்டுப்பாட்டு விதிகளை மீறி வாரிசு படத்தின் டிக்கெட் 3000 ரூபாய்க்கு மேல் இணையம் மூலம் விற்பனை செய்யப்படுகின்றதாக கூறப்படுகினறது. முகப்புத்தக பக்க ஒன்றில் இருந்து இது சம்பந்தமான விளம்பரங்கள் அதிகம் ரசிகர்களால் பகிரப்பட்டு வருகின்றது. இதில் யாழ் நகரில் அமைந்துள்ள... Read more »
தூக்கில் தொங்கிய நிலையில் ஆணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது என பொகவந்தலாவை பொலிஸார் தெரிவித்துள்ளனர். இச் சம்பவம் பொகவந்தலாவ, கெர்க்கஸ்வோல்ட் மேற்பிரிவு தோட்ட 08 ஏ இலக்க தேயிலை மலைப் பகுதியில் அமைந்துள்ள தொழிலாளர்களின் ஓய்வு அறையொன்றிலிருந்து இச் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. சடலமாக மீற்கப்பட்டவர் பொகவந்தலாவ... Read more »
ஜெலி மீனின் தாக்குதலுக்கு இலக்கான கடற்றொழிலாளர் ஒருவர் 4 மாதங்களுக்கு பின்னர் உயிரிழந்துள்ள சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது. இச் சம்பவம் யாழ்ப்பாணத்தில் இடம் பெற்றுள்ளதாக தெரிய வந்துள்ளது. யாழ்ப்பாணம் குருநகர் பகுதியை சேர்ந்த அல்ஜின் ஜெனி ராஜ் (வயது 52) என்ற மீனவரே... Read more »
2022 ஆம் ஆண்டுக்கான உயர்தர பரீட்சை தொடர்பான உதவி வகுப்புகள், கருத்தரங்குகள் மற்றும் செயலமர்வுகளை நடத்துவதற்கு எதிர்வரும் 17 ஆம் திகதி நள்ளிரவு முதல் தடை விதிக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. உயர்தர பரீட்சை ஜனவரி 23ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம்... Read more »
கண்டியில் சுற்றுலாப் பயணிகளுக்கு தங்குமிட ஹோட்டல் என்ற போர்வையில் பிரபல பெண்கள் கல்லூரிக்கும் அருகில் தகாத தொழில் நடத்தும் விடுதி ஒன்று பொலிஸாரினால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பொலிஸார் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது நபர் ஒருவருடன் 22 வயதுடைய யுவதியொருவர் கண்டி ஊழல் ஒழிப்பு அதிகாரிகள் குழுவினால்... Read more »
சட்டவிரோதமாக ஐரோப்பாவிற்குள் நுழைய முயன்ற முல்லைத்தீவு இளைஞன் ஒருவர், பெலாரஸ்- போலந்து எல்லையில் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன . சட்டவிரோத பயண முகவர் இந்த தகவலை உயிரிழந்த இளைஞனின் குடும்பத்தினருக்கு அறிவித்ததாக தெரிவிக்கப்படுகிறது. சம்பவத்தில் முல்லைத்தீவை சேர்ந்த இரத்னராசா சஜந்தன் (33) என்ற இளைஞனே... Read more »

