அரசாங்கத்தின் நலன்புரி நன்மைகள் சபை உதவிக் கொடுப்பனவு பட்டியலில் பெயர்கள் இணைத்துக் கொள்ளப்படாத பொதுமக்கள் கவனயீர்ப்பு போராட்டம்

அரசாங்கத்தின் நலன்புரி நன்மைகள் சபை உதவிக் கொடுப்பனவு பட்டியலில் பெயர்கள் இணைத்துக் கொள்ளப்படாத பொதுமக்கள் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். கோறளைப்பற்று மேற்கு பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட ஓட்டமாவடி, மீராவோடை, பதுரியா நகர், மாஞ்சோலை, காவத்தமுனை பகுதியைச் சேர்ந்த பொதுமக்களே இவ்வாறு கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.... Read more »

கடவுச்சீட்டுக்கான கட்டணங்களை குறைக்க தீர்மானம்!

ஒருநாள் சேவையின் கீழ் பெறப்படும் கடவுச்சீட்டுக்கான கட்டணங்களை குறைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக குடிவரவு, குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது. ஒரு நாள் சேவை மூலம் கடவுச்சீட்டுகளை பெற்றுக் கொள்வதற்கு இதுவரை காலமும் பெறப்பட்டு வந்த 20,000 ரூபா கட்டணம் அறவிடப்படுகிறது. தற்போது அறிமுகப்படுத்தப்பட்ட பிரதேச செயலாளர் அலுவலகத்தில்... Read more »
Ad Widget

உயர்தர பரீட்சை தொடர்பில் வெளியாகியுள்ள செய்தி!

2022 கல்வி பொதுத்தராதர உயர்தர பரீட்சைக்கான செயன்முறை பரீட்சைகள் இன்று ஆரம்பமாகவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. அதற்கமைய, கீழைத்தேய சங்கீதம் மற்றும் நாட்டியம் ஆகிய பாடங்களுக்கான செயன்முறை பரீட்சைகள் இன்று முதல் எதிர்வரும் 6 ஆம் திகதி வரை நடத்தப்படவுள்ளன. இந்நிலையில் குறித்த பாடங்களின்... Read more »

இலங்கை ரூபாவின் இன்றைய நிலவரம்

இலங்கையில் உள்ள வர்த்தக வங்கிகளில் இன்று (27) அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபா நிலையானதாக உள்ளது. அதன்படி, அமெரிக்க டொலரின் கொள்வனவு மற்றும் விற்பனை பெறுமதி மாற்றமின்றி முறையே ரூ. 299.74, ரூ. 317.47 ஆகவுள்ளதாக மத்திய வங்கி தெரிவித்துள்ளது. Read more »

காலி முகத்திடலில் கடுமையாகும் கட்டுப்பாடுக்கள்

கொழும்பு- காலி முகத்துவாரப்பகுதியில் , சுமார் 150 யாசகர்களின் நடமாட்டம் மக்களுக்கு கடும் இடையூறாக மாறியுள்ளதாக துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் விமான சேவைகள் அமைச்சு தெரிவித்துள்ளது. இந்நிலையில் காலி முகத்துவாரப் பகுதியில் யாசகர்களின் தொல்லைகளைக் கட்டுப்படுத்தும் நோக்கில் துறைமுக அதிகாரசபை மற்றும் பொலிஸ்... Read more »

இலங்கைக்கும் உலக வங்கிக்கும் இடையில் எட்டப்பட இருக்கும் இணக்கப்பாடு!

வரவு செலவுத் திட்டத்திற்கு தேவையான நிதியை வழங்குவதற்கு இலங்கைக்கும் உலக வங்கிக்கும் இடையில் இணக்கப்பாடு எட்டப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. “அந்த உடன்படிக்கையின் கீழ் இலங்கைக்கு உலக வங்கியிடமிருந்து 500 மில்லியன் டொலர்கள் கிடைக்கும். உரிய நிதியைப் பெறுவதற்கு அமைச்சரவையின் அனுமதி தேவை. கடந்த மார்ச்... Read more »

கனடாவில் விசா பெற்றுத் தருவதாக கூறி மோசடியில் ஈடுபட்ட ஜவர் கைது!

கனடாவில் கல்வி விசா பெற்று தருவதாக கூறி பணம் மோசடி செய்த ஆண் மற்றும் 5 பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இச் சம்பவம் தொடர்பில் கொழும்பு மோசடி விசாரணைப் பணியகத்திற்கு பல முறைப்பாடுகள் கிடைத்த நிலையில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அதற்கமைய, தேடுதல் உத்தரவுக்கு... Read more »

மற்றுமோர் கட்டண அதிகரிப்பு!

வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனங்களுக்கான உரிமம் புதுப்பித்தல் கட்டணத்தை அதிகரிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்காரவின் கையொப்பத்துடன் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி ஒவ்வொரு உரிமம் புதுப்பித்தலுக்கும் 100,000 ரூபாய் செலுத்த வேண்டும். முன்பு இந்த கட்டணம்... Read more »

மின்துண்டிப்பை மேற்கொள்ள சென்ற அதிகாரியை மிரட்டிய இராணுவ சிப்பாய்

திவுலப்பிட்டியவில் மின்சார கட்டணம் செலுத்தப்படாத வீடொன்றில் மின்சாரத்தை துண்டிக்கச் சென்ற அதிகாரியை இராணுவத்தின் லெப்டினன்ட் கேணல் தர அதிகாரி ஒருவர் அச்சுறுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த குற்றச்சாட்டின் பேரில் குறித்த இராணுவ லெப்டினன்ட் கேணல் தர அதிகாரி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்டுள்ள நபர்... Read more »

சமுர்த்தி பயனாளிகள் தெரிவு சர்ச்சை குறித்து யாழ். அரச அதிபர் விடுத்துள்ள அறிவிப்பு

யாழ். மாவட்டத்தில் சமுர்த்திப் பயனாளிகள் தெரிவில் ஏதாவது முறைகேடு இடம்பெற்றிருந்தால் பாதிக்கப்பட்டோர் தங்களுடைய  மேன்முறையீடுகளை ஜூன் மாதம் 10 ஆம்  திகதி வரை அனுப்பி வைக்க முடியும். எனவே, இந்த விடயம்  தொடர்பில் பொதுமக்கள் குழப்பமடையத் தேவையில்லை என யாழ். மாவட்ட அரசாங்க அதிபர்... Read more »