2000 பதின்மவயது தாய்மார்கள் பதிவு

நாட்டில் பெண் மற்றும் ஆண் பிள்ளைகள் இருபாலாரும் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாகும் சாத்தியம் அதிகம் காணப்படுவதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை தெரிவித்துள்ளது. தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபையின் தலைவர் சிரேஷ்ட விரிவுரையாளர் உதயகுமார அமரசிங்க ஊடகங்களுக்கு கருத்துரைக்கையில் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார். அத்துடன்,... Read more »

மலேசியாவில் தலை தூக்கிய கொவிட்

மலேசியாவில் கொவிட் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை கடந்த சில தினங்களாக அதிகரித்துள்ளது. இருப்பினும், முடக்கநிலைக் கட்டுப்பாடுகள் விதிக்கும் திட்டம் எதுவும் இல்லை என்று அந்நாட்டின் சுகாதார அமைச்சர் ஸுல்கிஃப்லி அகமது நேற்று அறிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், “மலேசியாவில் கொவிட் தொற்று... Read more »
Ad Widget

ஐரோப்பிய நாடுகளை சட்டவிரோத குடியேற்றம் நாசமாக்கிவிடும்: ரிஷி சுனக்

சட்டவிரோத குடியேற்றம் ஐரோப்பிய நாடுகளை நாசமாக்கி விடும் என இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் எச்சரித்துள்ளார். பல்வேறு நாடுகளை சேர்ந்த பொருளாதார குற்றவாளிகள், வறுமை உள்ளிட்ட காரணங்களால் பாதிக்கப்பட்ட அகதிகள் உள்பட பலரும் இங்கிலாந்து, இத்தாலி போன்ற வௌிநாடுகளில் சட்டவிரோதமாக குடியேறி வருகின்றனர். இதனால்... Read more »

கடற்படை முகாம் சித்திரவதை: பொலிஸ் அதிகாரி கைது

இலங்கையில் உள்நாட்டுப் போர் முடிந்தவுடன் ஒரு நபரை கடத்தி அவரை இரகசிய கடற்படை முகாம் ஒன்றில் சட்டவிரோதமாகத் தடுத்து வைத்து சித்திரவதை செய்ததாக குற்றஞ்சாட்டப்பட்ட ஒரு பொலிஸ்அதிகாரி கைது செய்யப்பட்டுள்ளார். 13 வருடங்களுக்குமுன்னர் இடம்பெற்ற கடத்தல் சம்பவம் தொடர்பில் மீரிகம பொலிஸ் நிர்வாகப் பிரிவின்... Read more »

வெள்ளத்தில் மிதக்கும் அவுஸ்திரேலியா

அவுஸ்திரேலியாவின் வடக்கிழக்கு பிராந்தியத்தில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கில் சிக்கிய 300க்கும் மேற்பட்ட மக்கள் இரவோடு இரவாக மீட்கப்பட்டுள்ளனர். இவர்களில் பலர் வெள்ளத்தில் சிக்காமல் கட்டடங்களின் மேற்கூரைகளில் ஏறித் தப்பினர். வெள்ளப் பெருக்கு காரணமாக கெய்ர்ன்ஸ் விமான நிலையம் மூடப்பட்டுள்ளது. சுமார் ஒரு லட்சத்து 60... Read more »

‘பட்ஜட்’ மஹிந்தவின் உழைப்புக்கு கிடைத்த வெற்றி

ரணிலின் சவால்மிக்க பயணத்துக்கு கிடைத்த அங்கீகாரமே பட்ஜட் வெற்றி. ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்டுக்கோப்புடன் உள்ளமையும் இந்த வெற்றியில் வௌிப்பட்டுள்ளது. நிறைவேற்றதிகாரம் கைமாறப்பட்ட பின்னர் நடப்பவற்றில் பல, ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவை புறந்தள்ளுவதாக உள்ளன. நீண்டகாலமாக இழுத்தடிக்கப்படும் அமைச்சரவை நியமனம், மாவட்ட மற்றும் தொகுதி... Read more »

ஜனவரியில் திட்டமிட்டப்படி தமிழரசு கட்சி மாநாடு: எம்.ஏ. சுமந்திரன் தகவல்

தமிழரசு கட்சியின் தேசிய மாநாடு திருகோணமலையில் திட்டமிட்டபடி இடம்பெறும் என பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்தார். தமிழரசு கட்சியின் திருகோணமலை மாவட்ட கிளையில் இன்று அரசியல் உயர்மட்ட குழு கூட்டம் இடம்பெற்றது. இக்குழு கூட்டத்தில் கலந்துகொண்டு பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே... Read more »

கிழக்கு மாகாண கல்வித் திணைக்களத்தில் மோசடி இம்ரான் மகரூப் குற்றச்சாட்டு!

கிழக்கு மாகாணக் கல்வித் திணைக்களத்தில் கொள்வனவு, வசதிகள் ஏற்படுத்திக் கொடுத்தல் மற்றும் அச்சிடல் விடயங்களில் கடந்த சில வருடங்களாக பாரிய ஊழல் இடம்பெற்று வருதாக திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூப் தெரிவித்தார். இது தொடர்பாக உயரதிகாரிகளுக்கு அறிவிக்கப்பட்ட போதிலும் அவர்களுக்கெதிராக நடவடிக்கை... Read more »

கொழும்பு இரவு விடுதியில் துப்பாக்கிச்சூடு!

கொழும்பின் புறநகர் பகுதியான கிரிபத்கொட, காலா சந்தியில் உள்ள இரவு விடுதியில் நேற்று இரு குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட மோதலின் போது தொடர் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக தெரியவந்துள்ளது. இரு பெண்களுக்கிடையில் ஏற்பட்ட தகராறே துப்பாக்கிச் சூட்டிற்கு காரணம் என விசாரணைகளை மேற்கொண்டு வரும் கிரிபத்கொட... Read more »

பிரான்ஸ் செல்ல முற்பட்டு உயிரிழந்த குடும்பஸ்தரின் சடலம் நாட்டிற்கு கொண்டு வரப்பட்டது!

பிரான்ஸ் செல்ல ஆசைப்பட்டு பெலாரஸ் எல்லையில் சடலமாக மீட்கப்பட்ட வட்டக்கச்சியைச் சேர்ந்த இளம் குடும்பத்தரின் இறுதிச் சடங்கு இன்று (19) செவ்வாய்க்கிழமை இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பிரான்சிற்கு செல்வதற்கு சட்டவிரோத முகவர் ஒருவரை நம்பி சென்ற கிளிநொச்சி வட்டக்கச்சி பிரதேசத்தை சேர்ந்த நபர் பெலாரஸ் நாட்டின்... Read more »