கொஸ்கம, பொரளுகொடையில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் வைத்தியசாலையில் அனுமதி!
கொஸ்கம, பொரளுகொடை பகுதியில் ஒருவர் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
ஆரம்ப அறிக்கையின்படி, இன்று முன்னதாக நடந்த இந்தத் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர் காயமடைந்துள்ளார்.
அவர் சிகிச்சைக்காக அருகிலுள்ள வைத்தியசாலைக்கு உடனடியாக கொண்டு செல்லப்பட்டார்.
துப்பாக்கிதாரிளை அடையாளம் காணவும், தாக்குதலுக்கான நோக்கத்தை தீர்மானிக்கவும் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை.

