மகளிர் கபடி உலகக் கிண்ணத்தை வென்றது இந்தியா..!

மகளிர் கபடி உலகக் கிண்ணத்தை வென்றது இந்தியா..!

11 அணிகளுக்கு இடையிலான 2-வது மகளிர் உலகக் கிண்ண கபடி போட்டி பங்களாதேஷின் தலைநகர் டாக்காவில் நடைபெற்றது.

இதில் ‘ஏ’ பிரிவில் இடம்பெற்றிருந்த நடப்பு சாம்பியன் இந்திய அணி (4 ஆட்டங்களிலும் வெற்றி) முதலிடமும், பங்களாதேஷ் (3 வெற்றி, ஒரு தோல்வி) 2-வது இடமும், ‘பி’ பிரிவில் சீன தைபே (5 ஆட்டங்களிலும் வெற்றி) முதலிடமும், ஈரான் (4 வெற்றி, ஒரு தோல்வி) 2-வது இடமும் பிடித்து அரையிறுதிக்கு தகுதி பெற்றன.

 

அரையிறுதியில் ஈரானை வீழ்த்தி இந்தியாவும், பங்களாதேஷை வீழ்த்தி சீன தைபே அணியும் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றன.

 

இந்நிலையில் மகுடத்துக்கான இறுதி ஆட்டத்தில் இந்தியா – சீன தைபே அணிகள் பலப்பரீட்சை நடத்தின.

 

விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய அணி 35-28 என்ற புள்ளி கணக்கில் சீனை தைபே அணியை வீழ்த்தி சம்பியன் பட்டம் வென்றது.

Recommended For You

About the Author: admin