தங்காலையில் தம்பதியினர் சுட்டுக் கொலை: விசாரணைகளுக்காக 5 பொலிஸ் குழுக்கள் களத்தில்!

தங்காலையில் தம்பதியினர் சுட்டுக் கொலை: விசாரணைகளுக்காக 5 பொலிஸ் குழுக்கள் களத்தில்!

​தங்காலையில், கபுஹேன பகுதியில் தம்பதியினர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக ஐந்து பொலிஸ் குழுக்கள் விசாரணைகளை ஆரம்பித்துள்ளன.

​கொல்லப்பட்ட 68 மற்றும் 59 வயதுடைய இந்தத் தம்பதியினர், உனக்குருவே சாந்தாவின் உறவினர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

​நேற்று மாலை 6:50 மணியளவில், இருவரும் தமது கடையில் இருந்தபோது, மோட்டார் சைக்கிளில் வந்த துப்பாக்கிதாரிகளால் சுடப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

​சம்பவம் நடந்த இடத்திலிருந்து தப்பிச் சென்ற சந்தேக நபர்கள், தாங்கள் பயன்படுத்திய மோட்டார் சைக்கிளை சீனிமோதற பகுதியில் கைவிட்டுச் சென்றுள்ளனர் என்றும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
​இந்தத் தாக்குதலுக்கு கைத்துப்பாக்கி பயன்படுத்தப்பட்டதை பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர்.

Recommended For You

About the Author: admin