யாழில் போதைக்கு அடிமையாகும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!

யாழ்ப்பாணம் ஊர்காவல்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பாடசாலை ஒன்றில் தரம் ஒன்பதில் கல்வி கற்கும் மாணவன் போதைப்பொருளுடன் பாடசாலைக்குன் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மாணவர் , புகையிலை போதைப்பாக்குடன், வந்த நிலையில் பாடசாலை நிர்வாகத்தினர் வழங்கிய முறைப்பாட்டுக்கு அமைய மாணவர் பொலிஸ் நிலையம் அழைத்துச் செல்லப்பட்டிருந்தார்.

குறித்த மாணவன் புகையிலை போதைப்பாக்குடன் வந்திருந்ததை ஆசிரியர் ஒருவர் கண்டுள்ளார்.

பொலிஸாருக்கு தகவல்
இதனையடுத்து இது தொடர்பில் பாடசாலை அதிபர் ஆசிரியர் தெரியப்படுத்தியிருந்தார். அதன் பின்னர் சம்பவம் தொடர்பில் ஊர்காவல்துறை பொலிஸாருக்கு தெரியப்படுத்தப்பட்டது.

சிறுவனின் பாதுகாப்பு கருதி பொலிஸ் நிலையம் அழைத்துச் சென்ற ஊர்காவல்துறை சிறுவர் பெண்கள் பொலிஸ் உத்தியோகத்தர்கள், அவரை நேற்றைய தினம் யாழ்ப்பாணம் குருநகர் பகுதியில் அமைந்துள்ள சிறுவர் நீதவான் நீதிமன்றத்தில் முற்படுத்தி இருந்தனர்.

இதன்போது, அவரை அச்சு வேலி பகுதியில் அமைந்துள்ள சான்று பெற்ற நன்னடத்தை பாடசாலையில் தங்க வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

அதேவேளை அண்மைக்காலமாக யாழில் போதைபொருள் பாவனை இளையோர் மத்தியில் அதிகரித்து வருவதாக பல்லரும் சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Recommended For You

About the Author: webeditor