சபரிமலை யாத்திரைக்கு இலங்கை அரசின் அங்கீகாரம்
சபரிமலை ஐயப்பன் ஆலயத்தை இலங்கை அரசால் அங்கீகரிக்கப்பட்ட புனித யாத்திரை தலமாகப் பிரகடனப்படுத்துவதற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
ஒவ்வோர் ஆண்டும் சுமார் 15,000க்கும் மேற்பட்ட இலங்கை இந்து பக்தர்கள் நவம்பர் முதல் ஜனவரி வரை சபரிமலைக்கு யாத்திரை மேற்கொள்கின்றனர். இவர்களுக்கான வசதிகளை ஏற்படுத்தித் தருவதற்காக, புத்தசாசன, சமய மற்றும் கலாசார விவகாரங்கள் அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

