மொனராகலை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி இலஞ்ச ஆணையகத்தால் கைது!
மொனராகலை ஒக்கம்பிட்டிய பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரி (OIC), இலஞ்சம் அல்லது ஊழல் ஆணைக்குழுவால் (Bribery Commission) கைது செய்யப்பட்டுள்ளார்.
இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டு தொடர்பிலேயே இந்த கைது இடம்பெற்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
முன்னாள் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் (SDIG) பிரியந்த ஜயகோடி விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த மற்றொரு உயர் மட்ட வழக்கை அடுத்து இந்த கைது இடம்பெற்றுள்ளது.

