மேலதிக அரசாங்க அதிபர் திரு.க.ஸ்ரீமோகனன் அவர்களுக்கான சேவைநலன் பாராட்டு விழா..!

மேலதிக அரசாங்க அதிபர் திரு.க.ஸ்ரீமோகனன் அவர்களுக்கான சேவைநலன் பாராட்டு விழா..!

வலுசக்தி அமைச்சிற்கு மேலதிகச் செயலாளராக பதவியுயர்வு பெற்றுச் செல்லும் மேலதிக அரசாங்க அதிபர் (காணி) அவர்களின் சேவைநலன் பாராட்டு விழா

வலுசக்தி அமைச்சிற்கு மேலதிக செயலாளராக பதவியுயர்வு பெற்றுச் செல்லும் மேலதிக அரசாங்க அதிபர் (காணி) திரு.க.ஸ்ரீமோகனன் அவர்களுக்கான சேவைநலன் பாராட்டு விழா மற்றும் பிரியாவிடை நிகழ்வு யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் திரு. மருதலிங்கம் பிரதீபன் அவர்கள் தலைமையில் இன்றைய தினம் (30.06.2025) பி. ப. 02.30 மணிக்கு மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

 

இந் நிகழ்வில் தலைமையுரையாற்றிய

அரசாங்க அதிபர் அவர்கள்,

யாழ்ப்பாண மாவட்டத்தில் 02 வருடங்களாக மேலதிக அரசாங்க அதிபர் (காணி) பதவியினை சிறப்புற கடமையாற்றி இலங்கை நிர்வாக சேவைகள் விசேட தரத்திற்கு பதவியுர்வு பெற்றுச் செல்லும் திரு ஸ்ரீமோகனன் அவர்கள், ஊர்காவற்றுறையின் உதவி அரசாங்க அதிபராகவும் தெல்லிப்பளை மற்றும் கரவெட்டி பிரதேசங்களின் பிரதேச செயலாளராகவும் பணியாற்றி பின்னர், வடக்கு மாகாண கைத்தொழில் திணைக்கள த்தின் மாகாணப் பணிப்பாளராகவும் கிளிநொச்சி மாவட்ட மேலதிக அரசாங்க அதிபராகவும் பணியாற்றியவர் எனத் தெரிவித்தார். மேலும், தன்னுடன் சமகாலத்தில் இலங்கை நிர்வாக சேவை கடமையில் இணைந்து கடமையாற்றிவருகின்றார் என தெரிவித்ததுடன், உத்தியோகத்தர்கள் தென்பகுதிக்கு கடமைமைக்கு செல்வது மிகவும் குறைவான நிலையில், அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சிற்கு மேலதிகச் செயலாளராக பதவியுயர்வு பெற்றுச் செல்வது தொடர்பில் வாழ்த்து தெரிவித்ததுடன், மீள்குடியேற்ற பிரதேசங்களில் குறிப்பாக தெல்லிப்பளை பிரதேசத்தில் ஆற்றிய பணி காத்திரமானது எனவும், காணி விடுவிப்பு மற்றும் அபிவிருத்தி வேலைகளில் சிறப்புற கடமையாற்றியதன் அடிப்படையில் மேலதிக அரசாங்க அதிபர் காணிக்கான பொறுப்பினை சிறப்பாக கடமையாற்றியவர் எனவும் தெரிவித்து தனது வாழ்த்துக்களை அரசாங்க அதிபர் தெரிவித்தார்.

 

இந் நிகழ்வில் மாவட்ட செயலக பிரதம கணக்காளர், பிரதம உள்ளகக் கணக்காய்வாளர், திட்டமிடல் பணிப்பாளர், பிரதம பொறியியலாளர், கணக்காளர், கணக்காளர் (பெறுகை), பிரதித் தேர்தல் ஆணையாளர், சமுர்த்திப் பணிப்பாளர், சமுர்த்தி கணக்காளர், பிரதி பதிவாளர் நாயகம், பிரதி புள்ளிவிபர பணிப்பாளர், நிர்வாக உத்தியோகத்தர், மோட்டார் போக்குவரத்து திணைக்கள உதவி ஆணையாளர், உதவி மாவட்ட செயலாளர், காணிப் பயன்பாட்டு திட்டமிடலின் உதவிப் பணிப்பாளர், மொழிபெயர்ப்பாளர், மேலதிக மாவட்டப் பதிவாளர் உள்ளிட்ட உத்தியோகத்தர்களால் வாழ்த்துரைகள் நிகழ்த்தப்பட்டது.

 

அதனைத் தொடர்ந்து, அரசாங்க அதிபர் அவர்களினால் பொன்னாடை அணிவித்து

கௌரவிக்கப்பட்டு நினைவுச் சின்னமும் வழங்கப்பட்டது. மேலும் கிளைகள் ரீதியாக பதவிநிலை உத்தியோகத்தர்கள் மற்றும் உத்தியோகத்தர்களாலும் கெளரவிக்கப்பட்டார்கள்.

 

இறுதியாக மேலதிக அரசாங்க அதிபர் தனது ஏற்புரையில், இவ் விழாவினை ஏற்பாடு செய்த அரசாங்க அதிபர் உள்ளிட்ட குழுவினருக்கு தமது நன்றியினைத் தெரிவித்ததுடன், அரச சேவையில் மாற்றம் என்பது மாறாதாது என்றவகையில் வகையில் என்னுடன் கடமையாற்றி ஒத்துழைப்பு நல்கிய அனைத்து உத்தியோகத்தர்களும் தமது நன்றியினைத் தெரிவித்துக் கொண்டார்.

 

இந் நிகழ்வில் மாவட்டச் செயலக பதவிநிலை உத்தியோகத்தர்கள் மற்றும் உத்தியோகத்தர்கள் கலந்துகொண்டனர்.

Recommended For You

About the Author: admin