புத்தக விலைகள் 20% அதிகரிப்பு:

புத்தக விலைகள் 20% அதிகரிப்பு: புதிய வரிகள் புத்தகத் துறைக்கு அச்சுறுத்தல்

தேசிய புத்தக வர்த்தகர்கள் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, 2024 ஜனவரி முதல் அமுலுக்கு வந்த 18% பெறுமதி சேர் வரி (VAT) மற்றும் தேசிய அபிவிருத்தி வரி (NBT) காரணமாக, அச்சிடப்பட்ட புத்தகங்களின் விலைகள் 20% உயர்ந்துள்ளன.

இலங்கை புத்தகப் பதிப்பாளர்கள் சங்கத்தின் தலைவர் சமந்தா இந்தீவர இது குறித்து தெளிவுபடுத்தியுள்ளார். முன்னர் பெறுமதி சேர் வரியில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டிருந்த புத்தகங்களுக்கு தற்போது 18% வரி விதிக்கப்பட்டுள்ளது.

 

எழுதுபொருட்களுக்கு விதிக்கப்பட்ட வரி 3% இலிருந்து 18% ஆக உயர்ந்தது போலல்லாமல், புத்தகங்களுக்கு நேரடியாக 18% வரி விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்த விவகாரம் தொடர்பாக ஜனாதிபதி செயலகம் ஆராய்ந்து வருவதாகவும், விரைவில் ஒரு பதில் எதிர்பார்க்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

கம்மினி மொரகொட, உலக அளவில் இதுபோன்ற வரி விதிப்பு காணப்படாதது என்றும், இது புத்தகத் துறைக்கு பெரும் அச்சுறுத்தலாக உள்ளது என்றும் எச்சரித்துள்ளார். மேலும், இந்த வரி விதிப்பால் குழந்தைகளுக்கு புத்தகங்களை வாங்குவது கடினமாகிவிடும் என்றும் அவர் கவலை தெரிவித்துள்ளார்.

Recommended For You

About the Author: admin