போதைப்பொருள் தடுப்பு தொடர்பான செயலமர்வு..!

போதைப்பொருள் தடுப்பு தொடர்பான செயலமர்வு..!

போதைப்பொருள் தடுப்பு தொடர்பான செயலமர்வு உதவி மாவட்ட செயலாளர் செல்வி உ.தா்சினி அவர்களின் தலைமையில் இன்றைய தினம் (27.06.2025) காலை 09.00 மணிக்கு மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.

இதன் நோக்கம் போதைப்பொருள் தடுப்பு செயற்றிட்டங்களை கிராம மக்களுக்கு கொண்டு செல்வதன் ஊடாக சமூக மாற்றங்களை அளவிடுதல் தொடர்பாக முதலாம் கட்ட பயிற்சியை நிறைவு செய்தவர்களுக்கான இரண்டாம் கட்ட பயிற்சியின் முன்னாயத்தக் செயலமர்வாக அமைந்தது.

இச் செயலமர்வில் தேசிய அபாயகர ஔடதங்கள் கட்டுப்பாட்டு சபையின் மாவட்ட இணைப்பாளர் திருமதி A.சியாமினி, ADIC நிறுவன நிகழ்ச்சித்திட்ட அதிகாாி திருமதி எஸ். நிதர்சனா, திட்ட அதிகாாி திரு. எம். சுசந்தன், இணைப்பாளர் திரு எஸ். குகதாசன், போதைப்பொருள் தடுப்பு அபிவிருத்தி உத்தியோகத்தர் மற்றும் சமுதாயம் சாா் சீர்திருத்த அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் ஆகியோா் கலந்து கொண்டனர்.

Recommended For You

About the Author: admin