
சட்டவிரோதமான முறையில் நாட்டுக்கு கொண்டுவரப்பட்ட இலத்திரனியல் சிகரெட்டுக்களுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அவர் டுபாயிலிருந்து நாடு திரும்பிய போது கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து இன்றையதினம் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஜா-எல பகுதியைச் சேர்ந்த 49 வயதுடையவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.