அதெப்படி இந்திய தேசிய கீதம் ஒலிக்கும்? ஐ.சி.சி.-யை கிழித்தெடுத்த பாக்கிஸ்தான் கிரிக்கெட் வாரியம்

அதெப்படி இந்திய தேசிய கீதம் ஒலிக்கும்? ஐ.சி.சி.-யை கிழித்தெடுத்த பாக்கிஸ்தான் கிரிக்கெட் வாரியம்

ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடைபெற்று வருகிறது. மினி உலகக் கோப்பை கிரிக்கெட் தொடராக பார்க்கப்படும் இந்த தொடரில் மொத்தம் 8 அணிகள் இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன.

அந்த வகையில், நேற்று (சனிக்கிழமை) நடைபெற்ற போட்டியில் ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதின. இந்தப் போட்டியின் தொடக்கத்தில் இந்தியாவின் தேசிய கீதம் சில நொடிகளுக்கு இசைக்கப்பட்டது. இந்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.

ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகள் இடையிலான போட்டியின் போது இந்தியாவின் தேசிய கீதம் ஒலிக்க செய்தது குறித்து ஐ.சி.சி. விளக்கம் அளிக்க வேண்டும் என்று பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் வலியுறுத்தி உள்ளது. மேலும், இந்தியாவின் தேசிய கீதம் ஒலிக்கப்பட்டதற்கு கண்டனமும் தெரிவித்துள்ளது.

இது குறித்து ஐ.சி.சி.க்கு நெருங்கிய வட்டாரங்கள் கூறும் போது, இந்த விவகாரம் தொடர்பாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் ஐ.சி.சி.-க்கு கடிதம் எழுதி இருப்பதாக தெரிவித்துள்ளது. மேலும், இந்த விவகாரம் தொடர்பாக ஐ.சி.சி. உரிய விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் அந்த கடிதத்தில் கோரப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

“சாம்பியன்ஸ் டிராபியில் தேசிய கீதம் ஒலிக்க செய்வதற்கு அவர்கள் தான் பொறுப்பேற்றுள்ளனர் என்ற அடிப்படையில், ஐ.சி.சி. இந்த விவகாரம் தொடர்பாக உரிய விளக்கம் அளிக்க வேண்டும் என்று பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் உறுதிபட தெரிவித்துள்ளது. இந்தியா தனது போட்டிகளை பாகிஸ்தானில் விளையாடவில்லை என்பதால், அவர்களது தேசிய கீதம் எப்படி தவறாக இசைக்கப்பட்டு இருக்கும் என்பதை புரிந்து கொள்ள அவர்கள் கடினமாக உணர்கின்றனர்,” என ஐ.சி.சி. வட்டாரங்கள் கூறியுள்ளன.

பாதுகாப்பு காரணங்களுக்காக இந்திய அணி பாகிஸ்தான் பயணம் மேற்கொண்டு கிரிக்கெட் விளையாட மறுத்துவிட்டது. இதன் காரணமாக இந்திய அணி விளையாடும் போட்டிகள் அனைத்தும் துபாயில் நடைபெறுகிறது. அந்த வகையில், இந்தியா மற்றம் பாகிஸ்தான் அணிகள் இடையிலான போட்டி இன்று துபாயில் நடைபெறுகிறது.

மித்தெனிய முக்கொலையுடன் தொடர்புடைய மற்றுமொரு சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

வீரகெட்டிய பொலிஸ் பிரிவின் தெலம்புயாய பகுதியில் நேற்று (22) மாலை சந்தேகநபர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

தங்காலை குற்றப் புலனாய்வுப் பணியகத்தைச் சேர்ந்த அதிகாரிகள் குழுவினால் சந்தேகநபர் கைது செய்யப்பட்டார்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர் தெலம்புய, வேகந்தவல பகுதியைச் சேர்ந்த 29 வயதுடையவர் என தெரியவந்துள்ளது.

கடந்த 18 ஆம் திகதி நடந்த இந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் அருண விதானகமகே என்பவரும் அவரது இரண்டு பிள்ளைகளும் கொல்லப்பட்டனர்.

அதன்படி, இந்தக் குற்றச் செயல் தொடர்பாக இதுவரை ஐந்து சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் மித்தெனிய பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Recommended For You

About the Author: admin