2024ஆம் ஆண்டிற்க்கான பாபவங்காவின் கணிப்புகள்

பாபா வாங்காவின் 2024 ஆம் ஆண்டிற்கான கணிப்புக்கள் தொடர்பில் தற்போது அதிகம் பேசப்பட்டு வருகிறது.

தற்போது உலகளவில் நடைபெறும் யுத்தங்களை அடிப்படையாக வைத்தே அவரின் அடுத்த ஆண்டுக்கான கணிப்புக்கள் தொடர்பில் பல்வேறு தரப்புகளிலும் பேசப்படுகிறது.

இதனடிப்படையில், அவர் ஏழு தீர்க்கதரிசனங்களைச் கூறியுள்ளார் என சர்வதேச ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

குறித்த செய்தியில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது,

ரஷ்ய ஜனாதிபதி கொலை
” 2024இல் பூகம்பம், தீ மற்றும் வெள்ளம் போன்ற பல இயற்கை பேரழிவுகள் ஏற்படும்.

புற்றுநோய்க்கான தீர்வு கண்டுபிடிக்கப்படும்.

குவாண்டம் கணினிகளின் வளர்ச்சியில் குறிப்பிடத்தக்க முன்னேற்றங்கள் ஏற்படும்.

ரஷ்யா ஜனாதிபதி புடின் தனது சொந்த நாட்டைச் சேர்ந்த ஒருவரால் படுகொலை செய்யப்படுவார்.

ஐரோப்பாவில் பயங்கரவாத தாக்குதல்கள் அதிகரிக்கும். மேலும் ஒரு “பெரிய நாடு” அடுத்த ஆண்டு அணு ஆயுத சோதனைகள், தாக்குதல்களை நடத்தும்.

பெரும் பொருளாதார நெருக்கடி ஏற்படும். அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி டிரம்ப், மர்ம நோயால் பாதிக்கப்படுவார்.

சைபர் தாக்குதல்கள் அதிகரிக்கும். ஹேக்கர்கள் மிகவும் அதிநவீனமாகி, பவர் கிரிட்கள் மற்றும் நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் போன்ற முக்கியமான உட்கட்டமைப்புகளை குறிவைப்பார்கள்” கணித்து எச்சரித்துள்ளார்.

Recommended For You

About the Author: webeditor