பாகிஸ்தான் குண்டுவெடிப்பில் 5 பேர் உயிரிழப்பு!

பாகிஸ்தானில் பாதுகாப்பு படையினரை குறிவைத்து வெடிகுண்டு தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும், குறித்த தாக்குதலில் பாதுகாப்பு படையை சேர்ந்த 5 பேர் உயிரிழந்த நிலையில் 20 க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளதாக தெரியவருகின்றது.

இச்சம்பவம் இன்றைய தினம் பாகிஸ்தானில், கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் உள்ள தேரா இஸ்மாயில் கான் மாவட்டத்தில் உள்ள போண்டா பஜார் பகுதியில் உள்ள டாங் அட்டா என்ற இடத்தில் இடம்பெற்றுள்ளது.

இதனைத்தொடர்ந்து, அருகேயுள்ள மருத்துவமனைகளில் அவசரகால நடவடிக்கைகளுக்கு தேவையான விடயங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இதுதொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், மோட்டார் சைக்கிளில் வெடிகுண்டு வைக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. அந்த பகுதியில் துப்பாக்கிச்சூடு சத்தமும் கேட்டது.

இச் சம்பவத்தின் தொடர்ச்சியாக, வெடிகுண்டு செயலிழப்பு பிரிவு மற்றும் பொலிஸார் உடனடியாக அந்த பகுதிக்கு சென்று தொடர்ந்து விசாரணை முன்னெடுத்து வருகின்றனர்.

Recommended For You

About the Author: webeditor