கனடா விமான விபத்தில் இரு இந்தியர்கள் உயிரிழப்பு!

கனடா- பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணம், சில்லிவாக் நகரில் பைபர் பி.ஏ.-34 செனிகா என்ற இரட்டை என்ஜின் கொண்ட விமானம் பயிற்சியில் ஈடுபட்டது.

இதில் இந்தியாவின் மும்பையை சேர்ந்த அபய் காட்ரூ, யாஷ் விஜய் ராமுகடே உட்பட 2 பயிற்சி விமானிகள் சென்றனர். இந்நிலையில் அந்த விமானம் திடீரென்று கீழே விழுந்து நொறுங்கியது.

பிரிட்டிஷ் கொலம்பியாவில் உள்ள சில்லிவாக்கில் சிறிய ரக விமானம் விழுந்து நொறுங்கியதில் 3 பேர் உயிரிழந்தனர். பலியானவர்களில் இரண்டு இந்திய பயிற்சி விமானிகளும் அடங்குகின்றனர்

இதில் பயிற்சி விமானிகள் 2 பேரும் உயிரிந்த நிலையில் விமான விபத்து குறித்து கனடா போக்குவரத்து பாதுகாப்பு விசாரணை நடத்தி வருகிறது.

Recommended For You

About the Author: webeditor