அமைச்சரவையில் ஏற்ப்பட இருக்கும் மாற்றம்!

அமைச்சரவையில் மாற்றம் ஏற்படுத்தப்படவுள்ளதாக ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.சந்திரசேன (S. M. Chandrasena) தெரிவித்துள்ளார்.

இந்த விடயத்தை நேற்றைய தினம் (15-03-2023) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டுபோது அவர் குறிப்பிட்டுள்ளார்.

அமைச்சரவை மாற்றம் விரைவில் நடைபெறவுள்ளது. மறுசீரமைப்பு என்பது அத்தியாவசியமானதாகும்.

இந்த நிலையில், எஸ்.எம் சந்திரசேனவுக்கு அமைச்சு பதவி கிடைக்குமா என அவரிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

அதற்கு பதிலளித்த அவர்,

அநுராதபுரத்தில் 4 தடவைகள் தேர்தலில் முதல்நிலையில் தெரிவாகியுள்ளதாக தெரிவித்தார்.

இதனடிப்படையில் தாம் அமைச்சு பதவிக்கு தகுதியானவர் என்ற போதிலும் அமைச்சு பதவி கிடைக்க வாய்ப்பில்லை என தெரிவித்தார்.

Recommended For You

About the Author: webeditor