இலங்கையில் இருந்து மேலும் நான்கு பேர் தமிழகத்தில் தஞ்சம் அடைந்துள்ளனர்

இலங்கையில் இருந்து இராமேஸ்வரத்தில் அகதிகளாக தஞ்சம் அடைந்துள்ள சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது.

யாழ்ப்பாணத்தில் இருந்து நேற்று இரவு நான்கு பேர் தமிழகத்தில் தஞ்சம் அடைந்துள்ளது தெரிய வந்துள்ளது.

மன்னாரில் படகு மூலம் சென்று நேற்று இரவு 10 மணியளவில் இவ்வாறு தஞ்சமடைந்துள்ளனர்.

புங்குடுதீவைச் சேர்ந்த ஒரே குடும்பத்தினர் நால்வரே இவ்வாறு சென்றடைந்துள்ளனர்.

இவ்வாறு சென்றவர்களில் இரு பெண்கள், ஒரு ஆண் மற்றும் ஒரு சிறுவனும் அடங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது.

Recommended For You

About the Author: webeditor